வெள்ளி, 30 ஜனவரி, 2009

சோதனைப்பதிவு- முன்னோட்டம்

இணைய தள அன்பர்களுக்கு எனது வணக்கங்கள்!

தமிழ்மணத்தில் வரும் வலைப்பதிவுகளைப்பார்க்கும்போது நாமும்
ஒரு பதிவைத்தொடங்கலாமே என்ற எண்ணம் கடந்த ஓர்
ஆண்டுகாலமாக இருந்தாலும் எப்படித்தொடங்குவது எனத்
தெரியாததால் தொடங்கவில்லை.

நண்பர் திரு. மஸ்தூக்கா அவர்களின் அதிரை வலைப்பதிவில்
சொந்தமாக வலைப்பதிவு தொடங்குவது எப்படி என்ற
தொடரைப்படித்ததும் இதோ ஆரம்பித்துவிட்டேன். மருத்துவம்
படிக்க ஆசைப்பட்டு இடம் கிடைக்காததால் வேளாண்மை
அறிவியல் படித்து மாநில மற்றும் மத்திய அரசின் வேளாண்
துறைகளில் பணி ஆற்றி பின் வங்கியில் சேர்ந்து 35 ஆண்டு
காலம் பணி புரிந்து ஒய்வு பெற்றுள்ளேன்.

எனது நினைவலைகளில் வருபவைகளை எழுத இருக்கிறேன்.
மூத்த வலைப்பதிவாளர்கள் ஊக்கம் தர வேண்டுகின்றேன்.

இந்த நேரத்தில் இந்த வலைப்பதிவை தொடங்க கிரியா ஊக்கியாக
இருந்த நண்பர் திரு.மஸ்தூக்கா அவர்களுக்கு என் மனமார்ந்த
நன்றிகள் பல.


வே.நடனசபாபதி