செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

காலத்தினால் செய்த நன்றி 2

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஏனென்றால் நான் கிளட்சை வேகமாகவிடவேயில்லை. என்னவாயிற்று என

பார்ப்பதற்காக வண்டியைவிட்டு இறங்குவதற்குள் காரிலிருந்த

சர்தார்ஜிஒருவர்இறங்கிவந்துஹிந்தியில் திட்டதொடங்கிவிட்டார்.


அப்போதுதான் கவனித்தேன் எனது வண்டியில்இருந்த கிளட்ச் கம்பி

அறுந்து இருந்ததை. நான் விவரத்தை சொல்லுமுன்பே அருகே வந்த சர்தார்ஜிஎன்நிலையைப்பார்த்ததும் எனதுநல்லவேளை,வேறு ஒன்றும் சொல்லாமல் 'டீக் ஹை' எனக்கூறிவிட்டு சென்றுவிட்டார்.


எல்லாவாகனங்களும்கடந்தபின் நான்எனதுவண்டியை

தள்ளிக்கொண்டுமனைவியுடன் கேட்டைத்தாண்டினேன். எங்காவது மெக்கானிக் பணிமனை இருந்தால் சரி செய்யலாமே என பார்த்தபோது , கேட்டுக்கு அப்பால் ஒரு சில தேநீர் கடைகள் மட்டும் இருந்தன. அப்போது 'பங்கா ரோட்டில்' இடதுபுறம் கோதுமை வயல்களும், வலப்புறம் டில்லி வீடு வசதி வாரியம் கட்டிக்கொண்டிருந்த முடிவடையா அடுக்ககங்களும் இருந்தன. வேறு எந்த கடையும் தென்படவில்லை.


அங்கிருந்து நான் இருந்த வீடு சுமார் இரண்டு கிலோ மீட்டருக்கு மேல் இருக்கும். பகலிலேயே ஆள்நடமாட்டம் குறைவாயிருக்கும். இரவைப்பற்றி சொல்லவே வேண்டாம்.மேலும் சாலை ஓர விளக்குகள் இல்லாததால் ஒரே கும்மிருட்டாய் இருந்தது. வீட்டுக்கு வண்டியை கொண்டுசென்றுமறுநாள்மெக்கானிக்கைதேடலாம்என்றால்,

அந்த இருட்டில் எப்படி வண்டியை தள்ளிக்கொண்டு மனைவியுடன்

செல்வது என்ற கவலை.


ஏதோ குருட்டு நம்பிக்கையில் முன்னேசென்றபோது சிறிதுதூரத்தில்

Madras AutoServiceஎன்றபெயர் பலகையுடன் இருந்தஒருசிறிய

பணிமனையைக்கண்டவுடன்ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

மிகவும் நம்பிக்கையோடு அதை நெருங்கினேன்.


தொடரும்

வியாழன், 18 பிப்ரவரி, 2010

காலத்தினால் செய்த நன்றி 1

1974 ம் ஆண்டு ஜனவரி மாதம் 13 ம் தேதி. பொங்கலுக்கு முந்திய நாள். அப்போது நாங்கள் புது தில்லியில் இருந்தோம். அது எங்களுக்கு 'தலைப்பொங்கல்' என்பதால் நானும் என் மனைவியும் பொங்கலுக்கான பொருட்கள் வாங்க 'ஜனக்புரியில்' நாங்கள் தங்கியிருந்த C 2D பிளாக் வீட்டிலிருந்து 'கரோல் பாக்' போனோம்.

அப்போதெல்லாம் ஜனக்புரி இப்போதுபோல் வளரவில்லை. எதுவேண்டுமானாலும் அருகில் உள்ள 'திலக் நகரு'க்கு தான் போகவேண்டும். நம் ஊர் பொருட்கள் வேண்டும் என்றால் சுமார் பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் 'கரோல் பாக்' செல்லவேண்டும்.

அங்கே உள்ள 'அஜ்மல் கான் ரோடை'யும் 'சரஸ்வதி மார்க்' கையும் இணைக்கும் தெருவில் நடைபாதையில் இருக்கும் நம்மூர் கடையில்தான் அவைகள் கிடைக்கும்.

ஜனவரியில் குளிர் அதிகமாக இருக்கும் ஆதலால் மதியம் சாப்பிட்டவுடன் கிளம்பிப்போய் பொருட்களை வாங்கிகொண்டு இருட்டுமுன் திரும்ப எண்ணி எனது மோட்டார் சைக்கிளில் கிளம்பினோம்.ஆனால் என்னவோ 'கரோல் பாகை'விட்டு கிளம்பும்போதே மாலை மணி ஆறுஆகிவிட்டது.

அங்கிருந்து 'புத்த பூர்ணிமா' பூங்கா வழியாக 'தௌலத் கான்' வந்து 'கண்டோன்மெண்டை' கடந்து 'பங்கா ரோடு' வரும்போது மணி 6.30 க்கு மேல் ஆகிவிட்டது. அந்த நேரம் பார்த்து ஏதோ ரயில் வருவதற்காக அங்குள்ள ரயில்வே கேட்டை மூடி விட்டார்கள். அதற்குள் அங்கே அநேக கார்களும், ஸ்கூட்டர்களும் குவிந்துவிட்டன.

ரயில் போனதும் கேட்டைத்திறந்தவுடனே எல்லா வாகனங்களும் ஒரே நேரத்தில் கிளம்பத்தொடங்கினநானும் எனது 'ஜாவா' மோட்டோர் சைக்கிளை இயக்கத்தொடங்கினேன்.

நான்முதல் கியரில் கிளட்சை மெதுவாக விட்டபோது, எனது பைக் திடீரென வேகம் பிடித்து முன்னே சென்ற ஒரு காரின் மீது மோதி இடித்துவிட்டது!

தொடரும்