செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

காலத்தினால் செய்த நன்றி 2

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஏனென்றால் நான் கிளட்சை வேகமாகவிடவேயில்லை. என்னவாயிற்று என

பார்ப்பதற்காக வண்டியைவிட்டு இறங்குவதற்குள் காரிலிருந்த

சர்தார்ஜிஒருவர்இறங்கிவந்துஹிந்தியில் திட்டதொடங்கிவிட்டார்.


அப்போதுதான் கவனித்தேன் எனது வண்டியில்இருந்த கிளட்ச் கம்பி

அறுந்து இருந்ததை. நான் விவரத்தை சொல்லுமுன்பே அருகே வந்த சர்தார்ஜிஎன்நிலையைப்பார்த்ததும் எனதுநல்லவேளை,வேறு ஒன்றும் சொல்லாமல் 'டீக் ஹை' எனக்கூறிவிட்டு சென்றுவிட்டார்.


எல்லாவாகனங்களும்கடந்தபின் நான்எனதுவண்டியை

தள்ளிக்கொண்டுமனைவியுடன் கேட்டைத்தாண்டினேன். எங்காவது மெக்கானிக் பணிமனை இருந்தால் சரி செய்யலாமே என பார்த்தபோது , கேட்டுக்கு அப்பால் ஒரு சில தேநீர் கடைகள் மட்டும் இருந்தன. அப்போது 'பங்கா ரோட்டில்' இடதுபுறம் கோதுமை வயல்களும், வலப்புறம் டில்லி வீடு வசதி வாரியம் கட்டிக்கொண்டிருந்த முடிவடையா அடுக்ககங்களும் இருந்தன. வேறு எந்த கடையும் தென்படவில்லை.


அங்கிருந்து நான் இருந்த வீடு சுமார் இரண்டு கிலோ மீட்டருக்கு மேல் இருக்கும். பகலிலேயே ஆள்நடமாட்டம் குறைவாயிருக்கும். இரவைப்பற்றி சொல்லவே வேண்டாம்.மேலும் சாலை ஓர விளக்குகள் இல்லாததால் ஒரே கும்மிருட்டாய் இருந்தது. வீட்டுக்கு வண்டியை கொண்டுசென்றுமறுநாள்மெக்கானிக்கைதேடலாம்என்றால்,

அந்த இருட்டில் எப்படி வண்டியை தள்ளிக்கொண்டு மனைவியுடன்

செல்வது என்ற கவலை.


ஏதோ குருட்டு நம்பிக்கையில் முன்னேசென்றபோது சிறிதுதூரத்தில்

Madras AutoServiceஎன்றபெயர் பலகையுடன் இருந்தஒருசிறிய

பணிமனையைக்கண்டவுடன்ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

மிகவும் நம்பிக்கையோடு அதை நெருங்கினேன்.


தொடரும்

5 கருத்துகள்:

  1. பதிவுகளை வாசித்தேன். ரசிக்கும்படி எழுதியிருக்கிறீர்கள்.

    - பொன்.வாசுதேவன்

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு பொன் வாசுதேவன் அவர்களே!. தங்களைப்போன்றோரின் பாராட்டுகள் எனக்கு மென்மேலும் ஊக்கத்தை கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.

    பதிலளிநீக்கு
  3. "புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
    உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
    ஓட்டுபட்டை வசதியும் உள்ளது."

    தகவலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. ம்ம்.

    கதை சொல்லியின் தேர்ந்த நடை.

    தொடர்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே!

      நீக்கு