வெள்ளி, 29 அக்டோபர், 2010

எனது ஓவியங்கள் 4

எனக்கு கார்ட்டூன் படங்கள் மிகவும் பிடிக்கும். அதனால் தான் கார்ட்டூன்படங்களைப்பார்த்ததும் உடனே அவைகளைப்பார்த்து வரைந்து இருக்கிறேன்.

என்னைப்பொறுத்தவரை கார்ட்டூன் படங்கள் வரைவது
கடினம் என எண்ணுகிறேன்.

கீழே உள்ள கார்ட்டூன் பொள்ளாச்சியில் பணி
புரிந்தபோது,குமுதத்தில் வந்ததைப்பார்த்து,
14-11-1970 அன்று வரைந்தது.

இந்த கார்ட்டூனை Ball Point பேனாவால் இரவு 9 .40 மணிக்கு
வரைந்தேன்




கீழே உள்ள கார்ட்டூனையும் குமுதம் இதழைப்பார்த்து

அதே நாள் இரவு 9 .45 மணிக்கு Ball Point பேனாவால்,

வரைந்தேன்.



கீழே உள்ள கார்ட்டூன் படங்களை, 29 -11 -1969 அன்று,

குமுதம் இதழைப்பார்த்து Ball Point பேனாவால்,

இரவு 8 .10 க்கும், 8 .30 க்கும் வரைந்தேன்.



திரைப்பட இயக்குனர் திரு ஸ்ரீதர் அவர்களின்
சித்ராலாயாவின் 'அவளுக்கென்று ஓர் மனம்' என்ற
படத்தின் விளம்பரத்தைப்பார்த்து கீழே உள்ள
படத்தை வரைந்தேன்.
வரைந்த நாள் 13 - 02 -1971.நேரம் மாலை மணி 6 .50




இந்த படங்கள் அனைத்தும் அழிப்பான் (Eraser) உபயோகப்படுத்தாமல் Free Hand ல் வரைந்ததுதான் .


வேறு சில படங்கள் அடுத்த பதிவுகளில்.

ஞாயிறு, 24 அக்டோபர், 2010

எனது ஓவியங்கள் 3

புது தில்லியில் பணி புரிந்தபோது , 'பால்கி' என்ற இந்தி
திரைப்பட விளம்பரத்தைப்பார்த்து,27-08-1968 அன்று
வரைந்தது கீழே உள்ள படம்.
(இந்த திரைப்படத்தில் வஹிதா ரஹ்மானும்,
ராஜேந்திர குமாரும் நடித்தாக நினைவு.)
இந்த படத்தை Ball Point பேனாவால்
மாலை 5 மணிக்கு வரைந்தேன்




கீழே உள்ள படங்கள் 02-10-1968 தேதியிட்ட ஆந்திர பிரபா இதழில் வந்த படத்தைப்பார்த்து,01 -10-1968 அன்று, Ball Point பேனாவால், வரைந்தது.
நேரம் இரவு பத்து மணி.








கீழே உள்ள படம் திரு கருணாநிதி அவர்கள்,
அண்ணா மறைவுக்குப்பின் முதல்வர் ஆனபிறகு
அவரைப்பற்றி Film Fare இதழில் வந்த
கட்டுரையின் கூட வந்த போட்டோவைப்பார்த்து ,
15 -o4 -1969 அன்று, பெங்களூருவில் பணி புரிந்தபோது,
Ball Point பேனாவால், வரைந்தது. நேரம் இரவு 10.30






இந்த படங்களும், அழிப்பான் (Eraser) உபயோகப்படுத்தாமல் Free Hand ல் வரைந்ததுதான் .

வேறு சில படங்கள் அடுத்த பதிவுகளில்.

வியாழன், 21 அக்டோபர், 2010

எனது ஓவியங்கள் 2

கீழே உள்ள படம் 1968 ல் புது தில்லியில், தேசிய விதைக்
கழகத்தில் பணி புரிந்தபோது , 27-06-1968 தேதியிட்ட குமுதம்
இதழில் வந்த படத்தைப்பார்த்து, 23 -06-1968 ல் வரைந்தது.





கீழே உள்ள படம் 04-07-1968 தேதியிட்ட குமுதம் இதழில்
வந்தபடத்தைப்பார்த்து, 30 -06-1968 ல் வரைந்தது.
(அப்போதெல்லாம் குமுதம் வெளியிடும் தேதிக்கு முன்பே கடைக்கு வந்துவிடும்)





கீழே உள்ள படம் 21-07-1968 அன்று வெளிவந்த ஆனந்த
விகடனின் அட்டைப்படத்தை பார்த்து 28 -08 -1968 ல் வரைந்தது.






இந்த படங்களும், அழிப்பான் (Eraser) உபயோகப்படுத்தாமல் Free Hand ல் வரைந்ததுதான் .


வேறு சில படங்கள் அடுத்த பதிவுகளில்.

திங்கள், 18 அக்டோபர், 2010

எனது ஓவியங்கள் 1

கீழே உள்ள படம் 1967 ல் கர்நாடக மாநிலம் (அப்போது மைசூர் மாநிலம் என அழைக்கப்பட்டது ) தார்வாரில், தேசிய விதைக் கழகத்தில் பணி புரிந்தபோது வரைந்தது.

18-09-1967 அன்று வெளிவந்த ஒரு செய்தித்தாளில் வெளியான ஒரு இந்தி படத்தின் விளம்பரத்தைப் பார்த்து வரைந்தேன்.








அந்த விளம்பரத்தில் அந்த குழந்தை அழுதுகொண்டே நடப்பதுபோல் வெளியான அப்படம் ஏனோ என்னைக்கவர்ந்தது. உடனே அதை வரையவேண்டும் என்ற எண்ணம் தோன்றியதால், கையில் கிடைத்த தாளில், Ball Point பேனா கொண்டு வரைந்தேன்.

இந்த படம் அழிப்பான் (Eraser) உபயோகப்படுத்தாமல் Free Hand ல் வரைந்தேன்.

வேறு சில படங்கள் அடுத்த பதிவுகளில்.

வியாழன், 14 அக்டோபர், 2010

எனது ஓவியங்கள்

ஓவியம் வரையும் ஆர்வம் எப்படி எனக்கு ஏற்பட்டது எனத்தெரியவில்லை.அரியலூர் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும்போது மாணவர்களுக்காக ஒரு ஓவிய போட்டி வைத்திருந்தார்கள். ஏதோ ஒரு ஆர்வத்தில் எந்தவித பயிற்சியும் இல்லாமலே அதில் கலந்துகொண்டேன்.

எங்களை ஒரு இயற்கை காட்சியை வரையச்சொன்னார்கள். ஒரு ஆறும், அதில்
ஒரு படகும், அருகில் ஒரு தென்னை மரமும் , மற்றும் எதிர் கரையில் ஒரு மலையும் உள்ளது போல் படம் வரைந்தேன். பரிசு கிடைக்கவில்லை.
ஆனால் பலபேருக்கு நடுவில் தரையில் அமர்ந்து படம்
போட்ட ஒரு இனிய அனுபவத்தை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.

அரியலூர் மற்றும் பெண்ணாடம் பள்ளிகளில் ஓவிய
வகுப்பு இல்லாததால் என்னால் ஓவியம் வரையும் முயற்சியை தொடர முடியவில்லை. ஆனால் விருத்தாசலம் பள்ளியில்எங்களுக்கு ஓவிய வகுப்பு இருந்தது. எங்கள் ஓவிய ஆசிரியர் திரு ஜெயராமன் அவர்கள் மூன்று வருடங்களும் சொல்லிக்கொடுத்த முறை எனக்கு ஓவியம் வரைவதில் ஒரு விருப்பத்தை உண்டாக்கியது.

அதுவும் அவர் கரும்பலகையில் பூக்களின் Design ஐ
பாதியாக வரைந்து. அதைப்பார்த்து எங்களது ஓவிய
நோட்டு புத்தகத்தில் முழு Design யும் வரையச்சொல்லி
பழக்கியது, பின்னால் ஒரு படத்தைப்பார்த்து Free Hand
முறையில் படம் வரைய உதவியது.

பத்தாம் வகுப்பில்'தண்டலை மயில்கள் ஆட" என்ற
கம்ப இராமாயண பாடலுக்கு படம் வரைந்து பார்த்ததும்,
நண்பர்களிடம் காட்டி மகிழ்ந்ததும் இன்னும் நினைவில் இருக்கிறது.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண் துறையில், இளம் அறிவியல்
பட்ட படிப்பில் சேர்ந்தபோது தான்ஓவியம் வரையத்தெரிவது எவ்வளவு
முக்கியம் எனத் தெரிந்துகொண்டேன்.

காரணம் விலங்கியல், தாவரவியல்,பூச்சிஇயல் போன்ற பாடங்களில் செய்முறை வகுப்புகளில் குறிப்பிட்ட
செடியையோ அல்லது விலங்கு அல்லது பூச்சியை படம்
வரைந்தோ தான் விளக்குவார்கள்.

அதோடல்லாமல் ஒவ்வொரு மாணவருக்கும்
தாவரகுடும்பத்தில்ஒவ்வோவோன்றிலிருந்தும் ஒரு செடியை பூக்களோடு கொடுத்து அதைப்பார்த்துவரையச்சொல்வார்கள். எனவே அவைகளை எங்களது Record Note களில்வரைந்து ஆசிரியர்களிடம் காட்டி கையொப்பம் பெறவேண்டும்.அப்படி பெற்றால் தான் செய்முறை தேர்வில் மதிப்பெண்கள் பெறமுடியும்.

எனக்கு பள்ளியில் கற்ற அனுபவத்தால் எந்த ஒரு
Specimen யும் பார்த்துவரைவது சுலபமாக இருந்தது. நான் சுலபமாக படம் போடுவதை பார்த்தஎனது வகுப்பு தோழர்கள் அவர்களது Record லும் என்னை வரையச்சொல்லி கேட்டபோது,தயங்காமல் வரைந்துகொடுத்தேன். அது பின்னால் தேர்வில் அந்த படங்களை சுலபமாக வரைய எனக்கு உதவியது.

எங்களது துறையின் ஆண்டுமலருக்கு
தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்களது உருவத்தை
Indian Ink ல் நான் வரைந்து தந்ததும் அந்த படம் ஆண்டு
மலரில் வெளியானதும் நேற்றுதான் நடந்தது போல் இருக்கிறது.

கல்லூரியை விட்டு வந்தபிறகு ஓவியம் வரைவதை
மறந்தேவிட்டேன். 1967 ல் கர்நாடகாவில் உள்ள தார்வார்
என்ற ஊரில் பணி செய்தபோது,தனிமை என்னை
வாட்டியபோது அதை மறக்க ஓவியம் வரைந்தாலென்ன
என யோசித்து வரையத்தொடங்கினேன்.

அப்படி வரைந்த சில படங்களை இந்த பதிவில் வெளியிட இருக்கிறேன்.

அவைகள் அடுத்த பதிவில் ......

புதன், 6 அக்டோபர், 2010

நினைவோட்டம் 30

எந்த ஒரு நிகழ்வையும் நினைவில் இருத்த, அதோடு தொடர்புடைய நமக்கு நன்றாக தெரிந்த ஒன்றை நினைவில் வைத்தால் அந்த நிகழ்வை எப்போதும் மறக்காமல் இருக்கமுடியும் என்பதே எங்கள் ஆசான் திரு M .R .G எங்களுக்கு சொல்லிக்கொடுத்தது.

குறு நில மன்னர்கள் தத்து எடுப்பதை தடுக்க கொண்டுவந்த திட்டம் யாரால்
கொண்டுவரப்பட்டது என்பதை நினைவில் இருத்த, 'தத்து எடுப்பது எப்போது நடைபெறும்?' என எங்களிடம் கேட்டார்.

'நாங்கள் குழந்தை இல்லாதபோது' என சொன்னபோது 'குழந்தை இல்லாத வீடு எப்படி இருக்கும்?' எனக்கேட்டு அவரே சொன்னார். "Dull ஆக இருக்கும். அதாவது அந்த House Dull ஆக இருக்கும். இதை நீங்கள் நினைவில் வைத்தால் அந்த திட்டத்தை கொண்டுவந்தவர் Dalhousie பிரபு என சுலபமாக சொல்லிவிடலாம்" என்று.

அது போல மன்னர் அக்பர் தன்னுடைய குதிரைப்படையில் உள்ள குதிரைகளை யாரும் களவாடி செல்லாமல் இருக்க, கால் நடை மருத்துவர்கள் இறைச்சிக்காக வெட்டப்படும் ஆடுகளை பரிசோதித்தபின் அவைகளுக்கு முத்திரை இடுவதுபோல், அந்த குதிரைகளின் உடலின்மேல் எண்ணிக்கை முத்திரை (Tattoo) வைத்தார் என சொன்னது இன்றும் நினைவுக்கு வருகிறது.

அப்போதெல்லாம் S.S.L.C தேர்வில், ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு மற்றும் பள்ளி இறுதி படிப்பான S.S.L.C வரை சொல்லிக்கொடுத்த சமூகவியல் பாடங்கள் அனைத்திலிருந்தும் கேள்விகள் கேட்பார்கள் என்பதால் ஒன்பதாம் வகுப்பில் படித்ததையும் மறக்காமல் இருந்து தேர்வு எழுதவேண்டும்.

எனவேதான் எங்கள் ஆசிரியர் சொல்லிக்கொடுத்த முறையால் எங்களுக்கு தேர்வு எழுத எந்த கஷ்டமும் இருந்தது இல்லை.

அவர் சொல்லிக்கொடுத்தது 1956 ல். ஐம்பத்து நான்கு ஆண்டுகள் ஆகியும் அது நினைவில் இருக்கிறது என்றால் அவர் சொல்லிகொடுத்த முறைதான்.

அவரது பயிற்சி எவ்வாறு பிறகு நான் வங்கியில் பணிபுரிந்தபோது உதவியது என்பதை பின்னால் எழுதுகிறேன்.

என்னால் இன்னும் மறக்க முடியாத ஆசிரியர்களில் திரு M.R.G அவர்களும் ஒருவர்.





நினைவுகள் தொடரும்



வே.நடனசபாபதி