வெள்ளி, 31 அக்டோபர், 2014

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 17



1971 ஆம் ஆண்டு மே திங்கள் 21 ஆம் நாள் வெள்ளிக்கிழமை 
காலை கண் விழித்தபோது புது தில்லியில் உள்ளோரும் 
ஏன் இந்தியாவில் உள்ளோர் எவருமே அன்று நடக்க இருக்கும் 
ஒரு நிகழ்வு நாட்டையே உலுக்கப் போகிறது என 
அறிந்திருக்கவில்லை. அந்த நிகழ்வில் தானும் ஒரு பகுதியாக
இருக்கப் போகிறோம் என்று பாரத ஸ்டேட் வங்கியின்
தலைமை காசாளர் ஒருவரும் எண்ணியிருக்கமாட்டார்!

செவ்வாய், 21 அக்டோபர், 2014

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 16




ரூபாய் இரண்டு இலட்சத்தை யாரையும் கலந்து ஆலோசிக்காமல் தொலைபேசியில் வங்கித் தலைவர் குரலில் பேசியவர் 
சொன்னதின் பேரில் விதிகளுக்கு புறம்பாக பணத்தை கொடுத்த 
அலுவலர் தான் ஏமாந்துவிட்டோம் எனத் தெரிந்ததும் 
என்ன செய்வதென்று புரியாமல் விழித்திருக்கிறார்.

செவ்வாய், 14 அக்டோபர், 2014

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 15



தொலைபேசியில் பேசியவர்  நான் தான்  வங்கியின் தலைவர்  

பேசுகிறேன். என்றதும் முதலில் பதற்றம் அடைந்த அந்த அலுவலர் 

பின்னர் மிகவும் பணிவாக சார்.உதவி மேலாளர் பேசுகிறேன்.மேலாளர் 

இல்லை சார். என்ன செய்யவேண்டும் என்று சொல்லுங்கள் சார்?’ என்று 

கன்னடத்தில் பேசத் தொடங்கிவிட்டார். 

புதன், 8 அக்டோபர், 2014

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 14




அந்த ஏமாற்றுப் பேர்வழியிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு வங்கி

கிளைக்குத் திரும்பியவுடன் அந்த கிளை மேலாளர் செய்த முதல் 

வேலை தலைமையகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டதுதான்.