செவ்வாய், 23 டிசம்பர், 2014

வங்கியாளர்களைப் பற்றிய நகைச்சுவை 8



நகைச்சுவையை விரும்பாதார் யார் உளர்? ஆனால் அது பிறர்  
மனதை புண்படுத்தாமல்  இருக்கவேண்டும்.மேலும் 
படிப்போருக்கும், கேட்பொருக்கும் அது  சிரிப்பை அல்லது 
புன் சிரிப்பை உண்டாக்குமானால் உண்மையில் அது 
நகைச்சுவைதான். 

புதன், 17 டிசம்பர், 2014

உலகை வலம் வரலாம் ஒரே நாளில் !



2025  ஆம் ஆண்டு. காலை 11.30 மணி இருக்கும். நியூயார்க் 
நகரிலிருந்து அரவிந்த் சென்னையில் இருக்கும் அவனது 
அம்மாவை தொலைபேசியில் அழைக்கிறான்.அம்மா.
ஒரு மகிழ்ச்சியான செய்தி. அலுவலக வேலையாக இன்று 
சென்னை வருகிறேன். என்றதும் அவனது அம்மா 
'என்னப்பா. நேற்று பேசியபோது கூட இந்தியா வருவதாக சொல்லவில்லையே. எப்போது கிளம்புகிறாய்? எங்கிருந்து 
பேசுகிறாய். இப்போது அங்கு மணி என்ன?’ என்றதும், 
அரவிந்த், அம்மா. அவசரவேலையாக என்னை எனது 
நிறுவனம் இன்றைக்கே கிளம்பவேண்டும் என்று சொல்லி 
சென்னைக்கு அனுப்புகிறார்கள். நான் இப்போது 
விமான நிலையத்திலிருந்து தான் பேசுகிறேன். 
இப்போது இங்கு இரவு மணி 1.00. சரி. விமானத்தில் 
ஏற அழைக்கிறார்கள்.மற்றவற்றை நேரில் வந்து 
சொல்கிறேன். என்று சொல்லிகைப்பேசி இணைப்பை 
துண்டிக்கிறான்.

வியாழன், 4 டிசம்பர், 2014

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 19


பாராளுமன்ற சாலையில் இருந்த பாரத ஸ்டேட் வங்கி கிளையில் உள்ள 

மாற்று சாவியை  கொண்டு வர நண்பர் திரு வாசுதேவன் புறப்பட்டபோது 

நானும் வருகிறேன் என்று சொல்லி அவரோடு எனது ஜாவா மோட்டார் 

சைக்கிளில் அந்த கிளைக்கு புறப்பட்டேன்.