சனி, 26 மார்ச், 2016

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.22


1965 ஆம் ஆண்டு நடந்த இந்தி திணிப்பு போராட்டம் ஒருவழியாக தற்காலிகமாக முடிவுக்கு வந்ததால், தமிழகத்தில் அமைதி திரும்பியது போல் இருந்தாலும் அது புயலுக்குப்பின் அமைதி போன்றது தான் என்பதை அப்போதைய அரசு உணரவில்லை.

வெள்ளி, 18 மார்ச், 2016

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.21


1966 ஆம் ஆண்டு சனவரி திங்கள் 27 ஆம் நாள் மாலை, அதற்கு முந்தைய ஆண்டு அதே நாளன்று காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிர் துறந்த மாணவர் திரு இராஜேந்திரனுக்கு முதலாம் ஆண்டு நினைவாஞ்சலி செலுத்த அண்ணாமலைபல்கலைக்கழகத்தில் உள்ள திறந்த வெளி அரங்கில் (Open Air Theatre) மாணவர்கள் அனைவரும் கூடினோம்.

வெள்ளி, 11 மார்ச், 2016

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.20


1965 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 25 ஆம் நாள், பாராளுமன்ற அவைத் தலைவரால், பாராளுமன்றத்தில் கலந்தாய்வு (Discussion) க்காக அனுமதிக்கப்பட்ட பாராளுமன்ற துணைக்குழு தயாரித்த அலுவல் மொழி சட்டத்தில் கொண்டுவரவேண்டிய மாற்றம் பற்றிய சட்ட முன்வரைவு (Bill), பஞ்சாப் பிரிவினைப் போராட்டம் மற்றும் காஷ்மீர் பிரச்சினைகளை காரணம் காட்டி சட்ட திருத்தம் கொண்டுவர அது சரியான நேரம் இல்லையென கூறி அந்த சட்ட முன்வரைவு திரும்பப்பெறப்பட்டது என்று முந்தைய பதிவில் சொல்லியிருந்தேன்.

சனி, 5 மார்ச், 2016

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.19

மாணவர்கள் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை பிப்ரவரி 12 ஆம் நாள் கைவிட்ட காரணத்தால் தமிழகத்தில் மூடப்பட்டிருந்த கல்லூரிகளும் பள்ளிகளும் மீண்டும் திறக்கப்பட்டன. எங்களது அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் 50 நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்டது. நாங்களும் திரும்பவும் வகுப்புக்களுக்கு செல்லத் தொடங்கினோம்.