வெள்ளி, 22 ஏப்ரல், 2016

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.25


தி.மு. க. ஆட்சிக்கு வந்த 1967 ஆம் ஆண்டு இந்தி திணிப்பு போராட்டக்குழுவில் இருந்த தீவிரவாத பிரிவைச் சேர்ந்தோர் போராட்டத்தை மீண்டும் துவக்கினார்கள் என்றும், 1967 ஆம் ஆண்டு டிசம்பர் 19 நாளன்று துவங்கிய அந்த போராட்டம் டிசம்பர் 21 ஆம் நாளன்று வன்முறை போராட்டமாக மாறியது என்றும்  முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.

புதன், 13 ஏப்ரல், 2016

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.24


1967 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்களில் மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில் வெற்றிபெற்றது போலவே பாராளுமன்றத் தேர்தலிலும் தி.மு.க அணிக்கு வெற்றி முகம் தான். திமுக 25 தொகுதிகளிலும், சுதந்திரா கட்சி 6 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 4 இடங்களிலும்,முஸ்லிம் லீக் 1 இடத்திலும் வெற்றி பெற்று 39 இடங்களில் 36 இடங்களை கைப்பற்றின. ஆண்ட காங்கிரசோ வெறும் 3 இடங்களோடு திருப்தி பட்டுக்கொள்ளவேண்டியதாயிற்று.


புதன், 6 ஏப்ரல், 2016

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.23


1967 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்களில் மாநில சட்டசபைக்கும் பாராளுமன்றத்திற்கும் தேர்தல் நடந்தபோது, கர்நாடக மாநிலம் (அப்போது மைசூர் மாநிலம்) தார்வார் மாவட்டத்தில் கதக் (Gadag) என்ற ஊரில் தேசிய விதைக் கழகத்தில் விதைப் பெருக்க அலுவலராக (Seed Production Assistant) ஆக நான் பணிபுரிந்துகொண்டிருந்தேன். (இப்போது கதக் தனி மாவட்டமாக ஆகிவிட்டது.)