திங்கள், 27 ஜூன், 2016

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.30


இந்தி திணிப்பை ஏதோ தமிழ் நாட்டில் மட்டும் தான் குறிப்பிட்ட சிலர் எதிர்ப்பது போலவும், மற்ற மாநிலத்தினர் குறிப்பாக தென்னகத்தில் உள்ள மற்ற மாநிலங்களில் உள்ளவர்கள் எதிர்க்கவில்லை என்பது போலவும் ஒரு மாயையை, தவறான கருத்தை மய்யத்தில் ஆள்வோரும் இங்குள்ள சிலரும் பரப்பி வந்திருக்கின்றனர். இன்னும் பரப்பி வருகின்றனர்.

செவ்வாய், 14 ஜூன், 2016

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.29


இந்தி மொழித் திணிப்பு பற்றிய சச்சரவு ஓய்வதற்குள் அதே ஆண்டு (2014) செப்டம்பர் மய்ய அரசின் அலுவல் மொழித் துறை ஒரு சுற்றறிக்கையை அனுப்பி திரும்பவும் இன்னொரு சச்சரவு உண்டாக்க வழி வகை செய்தது. அது என்ன என்று அறிவதற்கு முன் ஜூலை திங்களில் நடந்த மற்றொரு நிகழ்வைப் பார்ப்போம்.

சனி, 4 ஜூன், 2016

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.28


1986 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் எதுவும் பெரிதாக தமிழகத்தில் நடைபெறவில்லை. அந்த சமயத்தில் மய்ய அரசின் ஆட்சிப்பொறுப்பில் இருந்த காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கட்சிகள் மெதுவாக, அதே நேரம் நிதானமாக ஆரவாரமில்லாமல் இந்தியை அரசுப் பணிகளில் பயன்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டன.