புதன், 28 ஜூன், 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 27

எப்போதுமே குழுவாக பேருந்தில் பயணிக்கும்போது ஆரம்பத்தில் அனைவரிடமும் இருந்த உற்சாகம், கலகலப்பு நேரம் போகப்போக குறைந்து போய் திடீரென அமைதி குடிகொண்டுவிடும். பாதிபேர் உறங்கிவிடுவதுண்டு. மீதிபேர் அமைதியாய் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பார்கள். ஆனால் எங்களது பேருந்துபயணம் ஆரம்பம் முதல் கடைசி வரை கலகலப்பு குறையாமல் இருந்ததற்கு காரணமாக இருந்தவர் திருமதி சகுந்தலா அய்யம்பெருமாள் அவர்கள்.

வியாழன், 22 ஜூன், 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 26

ஓட்டலில் உள்ள உணவகத்தில் காலை சிற்றுண்டி எடுத்தூண் (Buffet) முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு இடம் குறைவாக இருந்ததால் வரிசையில் நின்று தேவையானதை எடுத்து சாப்பிட நின்றுகொண்டிருக்கும்போது, அடுத்த சந்திப்பை எங்கு வைத்துக்கொள்ளலாம் என்பது பற்றி எங்களில் சிலர் பேசிக்கொண்டு இருந்தனர்.

வெள்ளி, 16 ஜூன், 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 25

மறு நாள் (12-09-2016) காலையில் 5 மணிக்கே எழுந்து குளித்துவிட்டு, முத்துப்பேட்டைக்கு செல்ல தயாரானோம். காலை 7 மணிக்கே கீழே உள்ள உணவகத்து வரவேண்டும் என நண்பர் பாலு சொல்லியிருந்ததால், முதல் நாள் காஃபிக்கு காத்திருந்ததைப்போல், காத்திருக்காமல் கிளம்பிவிட்டோம். மறக்காமல் எனது நிழற்படக் கருவியையும் எடுத்துக்கொண்டேன்.

திங்கள், 5 ஜூன், 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 24


கடைசி போட்டி என்னவாயிருக்கும் அது பற்றி நண்பர் நாச்சியப்பன் என்ன சொல்லப் போகிறார் என ஆவலுடன் நாங்கள் காத்திருந்தபோது, போட்டியில் கலந்துகொண்டிருக்கும் தம்பதியர்களைப் பார்த்து ‘எல்லோரும் புடவை கொண்டுவந்திருக்கிறீர்களா?’ என்று அவர் கேட்டதும், நாங்கள் ‘ஆமாம்.’ என்று ஒரே குரலில் சொன்னோம்.