வெள்ளி, 16 ஜூன், 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 25

மறு நாள் (12-09-2016) காலையில் 5 மணிக்கே எழுந்து குளித்துவிட்டு, முத்துப்பேட்டைக்கு செல்ல தயாரானோம். காலை 7 மணிக்கே கீழே உள்ள உணவகத்து வரவேண்டும் என நண்பர் பாலு சொல்லியிருந்ததால், முதல் நாள் காஃபிக்கு காத்திருந்ததைப்போல், காத்திருக்காமல் கிளம்பிவிட்டோம். மறக்காமல் எனது நிழற்படக் கருவியையும் எடுத்துக்கொண்டேன்.



இந்த சந்திப்பு பற்றி அறிவித்தபோதே, ‘இரண்டாம் நாள் காலையில் கிளம்பி முத்துபேட்டை போய்விட்டு வர மாலை ஆகிவிடும். எனவே யார் யார் அன்றிரவே ஊருக்கு திரும்புகிறார்களோ அவர்கள் காலையிலேயே அறையை காலி செய்துவிடலாம். அனாவசியமாக அறை வாடகை தருவதை தவிர்க்க பொதுவாக ஒரு அறையை வாடகைக்கு எடுத்திருக்கிறோம். எனவே இரவு திரும்புவோர் தங்களது உடமைகளை எடுத்துவந்து அந்த அறையில் வைத்துவிடலாம். மாலையில் திரும்பியவுடன் அங்கிருந்து எடுத்து செல்லலாம்.’ என நண்பர் பாலு தெரிவித்திருந்தார்.

நாங்களும் அவ்வாறே செய்ய நினைத்திருந்தபோது, நண்பர் அய்யம்பெருமாள், அவரும் அவரது துணைவியாரும் அங்கு மேலும் ஒரு நாள் தங்க இருப்பதால் அறையை காலி செய்யப்போவதில்லை என்றும் எனவே எங்களது உடைமைகளை அவர்களது அறையில் வைத்து செல்லலாம் என்றும் சொல்லியிருந்தார்.

எனவே எங்களது பெட்டிகளை எடுத்துக்கொண்டு போய் நண்பர் அய்யம்பெருமாள் அறையில் வைத்தோம். அவரும், அவரது துணைவியாரும் தயாராக இருந்ததால், நாங்கள் வெளியே வந்து உணவகத்திற்கு வெளியே இருந்த கூடத்தில் காத்திருந்தோம். அதற்குள் மற்ற நண்பர்களும் ஒருவர் பின் ஒருவராக வரத்
தொடங்கினார்கள்.

அதற்குள் அங்கு வந்திருந்த நண்பர்களை குழுவாகவும், அவர்களது துணைவியார்களுடனும் தனது பலனியில் (Ipad) படம் எடுத்தார் திருமதி சகுந்தலா அய்யம்பெருமாள் அவர்கள். அந்த படங்கள் கீழே.


நானும் என் துணைவியாரும்


திருமதி & திரு R.பாலசுப்ரமணியம் (பாலு)


திருமதி & திரு T.N.பாலசுப்ரமணியம்


திருமதி & திரு சக்கரவர்த்தி


திருமதி & திரு செல்லையா


திருமதி & திரு கோவிந்தசாமி


திருமதி & திரு ஹரிராமன்


திருமதி & திரு கேசவன்


திருமதி & திரு மாணிக்கவேலு


திருமதி & திரு முகம்மது உஸ்மான்


திருமதி & திரு முருகைய்யன்


திருமதி & திரு முத்தையா


திருமதி & திரு முத்துக்கிருஷ்ணன்


திருமதி & திரு நாச்சியப்பன்


நான், நண்பர்கள் நாச்சியப்பன், முத்துக்கிருஷ்ணன், கோவிந்தசாமி ஆகியோர் துணைவியர்களுடன்


நண்பர்கள் கோவிந்தசாமி, நாச்சியப்பன், முகம்மது உஸ்மான் ஆகியோர் துணைவியர்களுடன்


நண்பர்கள் முகம்மது உஸ்மான்,அய்யம்பெருமாள் ஆகியோர் துணைவியர்களுடன்


பயணம் செல்ல தயாராக அமர்ந்திருந்த நண்பர்கள் சேதுராமன், மீனாட்சிசுந்தரம்,T.N.பாலு,R.பாலு மற்றும் ஹரிராமன்


வகுப்பில் அகரவரிசைப்படி அமர்ந்திருந்ததை மறக்காத நண்பர்கள் அந்தோணிராஜ்,அழகப்பன்,அய்யம்பெருமாள்


நண்பர்கள் நடராஜன், அய்யம்பெருமாள்,முருகானந்தம்,சரவணன்


நண்பர்கள் அய்யம்பெருமாள் & செல்லப்பா


அனைத்து நண்பர்களும் வந்துவிட்ட பிறகு சிற்றுண்டி அருந்த உணவகத்திற்குள் நுழைந்தோம்.


தொடரும்

26 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வருகைக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே!

      நீக்கு
  2. புகைப்படங்களின் விவரிப்பு அருமை

    தங்களது நண்பரின் பெயர் T.N.பாலு என்றதும் பழைய திரைப்பட இயக்குனர் எனக்கு ஞாபகம் வந்து விட்டார் "சங்கர்லால்" படத்தைக்கூட அவர்தான் இயக்கினார்.

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே! நீங்கள் குறிப்பிட்டுள்ள திரு T.N.பாலு இயக்குனர் என்றால் என் வகுப்புத் தோழர் T.N.பாலு வானிலை ஆய்வியலார்.

      நீக்கு
  3. இந்த சந்திப்பில், சரியான திட்டமிடல் என்பது எவ்வளவு பெரிய வெற்றியை, மகிழ்வைத் தரும் என்பதனை சொல்லாமல் சொல்லி இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! இந்த சந்திப்பு வெற்றிகரமாக நடைபெற திட்டமிட்டு உழைத்த தஞ்சை வாழ் நண்பர்களுக்கே எல்லா பெருமையும் போய் சேர வேண்டும். ஒவ்வொரு நிகழ்வையும் ஆலோசித்து அருமையாய் நடத்தினார்கள்.

      நீக்கு
  4. கடந்த 10 நாள்களுக்கும் மேலாக சொந்த மற்றும் ஆய்வுப்பணியாக வெளியூர் சென்றிருந்தேன். தற்போதுதான் வலைப்பக்கம் வரமுடிந்தது. தொடர்ந்து பதிவுகள் மூலமாகச் சந்திப்போம்.
    உங்களது நினைவாற்றலும், பதிவும் எங்களை நியக்க வைக்கின்றன. தொடர்ந்து வாசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் தொடர்வதற்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே!

      நீக்கு
  5. படங்களும் பதிவும் அருமை. வாழ்த்துகள்.

    தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்தியமைக்கும் நன்றி திரு கோபாலகிருஷ்ணன் அவர்களே!

      நீக்கு
  6. பதில்கள்
    1. வருகைக்கும், வாழ்த்தியமைக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  7. 'எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ?' என்ற இரத்தத் திலகம் படப் பாடல் நினைவுக்கு வருகிறது.வாழ்க உங்கள் நட்பு!- இராய செல்லப்பா சென்னை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு இராய செல்லப்பா அவர்களே! நாங்கள் படித்த அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், 2013 ஆம்ஆண்டு ஆகஸ்ட்13 ஆம் நாள் சந்தித்தது பற்றி பிரிந்தவர் கூடினால் ....???????? என்ற தலைப்பில் எழுதிய தொடர் பதிவில் தாங்கள் குறிப்பிட்டிருக்கும் பாடலை குறிப்பிட்டிருந்தேன்.அதை நினைவூட்டியமைக்கு நன்றி!

      நீக்கு
  8. அனைவருக்கும் எனது வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், வாழ்த்தியமைக்கும் நன்றி திரு அசோகன் குப்புசாமி அவர்களே!

      நீக்கு
  9. வாசித்தேன்..மிக்க நன்றி
    நான் இரண்டாவதாக - வேதாவின் வலை.2
    https://kovaikkothai.wordpress.com/
    திறந்துள்ளேன்என்பதை தெரிவிக்கிறேன்.
    வாருங்கள். நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோதரி திருமதி வேதா இலங்காதிலகம் அவர்களே! தங்களது புதிய வலைப்பக்கத்திற்கும் சென்று பின்னூட்டம் இட்டிருக்கிறேன்.

      நீக்கு
  10. படம் நன்று.. பதிவு மிக நன்று !!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பதிவையும், படங்களையும் பாராட்டியமைக்கும் நன்றி சிவா!

      நீக்கு
  11. நினைக்க நினைக்க நெஞ்சம் மகிழுதே . படங்களும் பதிவும் ரசிக்க வைத்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், படங்களை இரசித்தமைக்கும், எங்கள் மகிழ்ச்சியில் பங்கு கொண்டமைக்கும் நன்றி திருG.M.பாலசுப்பிரமணியம் அவர்களே!

      நீக்கு
  12. சந்திப்பை விவர்இத்த விதம்,நிகழ்வுகளைக் கண்முன் கொணர்கிறது.துணைக்கு படங்கள்!
    அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

      நீக்கு
  13. பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திருமதி கோமதி அரசு அவர்களே!

      நீக்கு