1974 ம் ஆண்டு ஜனவரி மாதம் 13 ம் தேதி. பொங்கலுக்கு முந்திய நாள். அப்போது நாங்கள் புது தில்லியில் இருந்தோம். அது எங்களுக்கு 'தலைப்பொங்கல்' என்பதால் நானும் என் மனைவியும் பொங்கலுக்கான பொருட்கள் வாங்க 'ஜனக்புரியில்' நாங்கள் தங்கியிருந்த C 2D பிளாக் வீட்டிலிருந்து 'கரோல் பாக்' போனோம்.
ஜனவரியில் குளிர் அதிகமாக இருக்கும் ஆதலால் மதியம் சாப்பிட்டவுடன் கிளம்பிப்போய் பொருட்களை வாங்கிகொண்டு இருட்டுமுன் திரும்ப எண்ணி எனது மோட்டார் சைக்கிளில் கிளம்பினோம்.ஆனால் என்னவோ 'கரோல் பாகை'விட்டு கிளம்பும்போதே மாலை மணி ஆறுஆகிவிட்டது.
ரயில் போனதும் கேட்டைத்திறந்தவுடனே எல்லா வாகனங்களும் ஒரே நேரத்தில் கிளம்பத்தொடங்கினநானும் எனது 'ஜாவா' மோட்டோர் சைக்கிளை இயக்கத்தொடங்கினேன்.
நான்முதல் கியரில் கிளட்சை மெதுவாக விட்டபோது, எனது பைக் திடீரென வேகம் பிடித்து முன்னே சென்ற ஒரு காரின் மீது மோதி இடித்துவிட்டது!
தொடரும்
நினைவலைகளில் என்ன திடீரென இவ்வளவு பெரிய இடைவெளி என நினைத்தேன். :)
பதிலளிநீக்குதொடர்கிறேன்.
நன்றி.
வருகைக்கும்,கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே!
நீக்கு