திங்கள், 26 அக்டோபர், 2020

எது சிறந்தது ? 8

 

எடுத்தூண்முறையில் அநேகமாக நின்றுகொண்டுதான் சாப்பிடவேண்டியிருக்கும்.அப்படி நின்று கொண்டு சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பது பற்றி அறிவியலார்கள் சொல்லும் கருத்துக்கள் இதோ.

புதன், 23 செப்டம்பர், 2020

எது சிறந்தது ? 7


எடுத்தூண் முறையில் நாமே உணவு வகைகள்  வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு சென்று எடுத்து சாப்பிடவேண்டும் என்பதால், விருந்துக்கு வருவோர் விரைவில் சாப்பிட்டுவிட்டு திரும்பவேண்டும் என்று ஒரு ஒழுங்கைக் கடைப்பிடிக்காமல் கும்பலாக சென்று உணவை எடுக்க முயல்வதுண்டு. 

வியாழன், 27 ஆகஸ்ட், 2020

எது சிறந்தது ? 6







எடுத்தூண் (Buffet) முறையில் செலவு குறையும் என்பது உண்மையல்ல.  பந்தியில் பரிமாற ஆகும் செலவை விட இந்த முறையில் உணவுக்கு செலவு கூட வாய்ப்புண்டு.விருந்து அளிப்போர் மற்றும் விருந்தினர்கள் ஆகியோரே அதற்கு காரணம்.

சனி, 8 ஆகஸ்ட், 2020

எது சிறந்தது ? 5


திருமண விழாக்களிலும், மற்ற விழாக்களிலும் நடைபெறும் விருந்தில், விருந்தினர்கள் அமர்ந்து, பிறர் பரிமாறி சாப்பிடும் முறை மாறி, பலவித உணவு வகைகளை எல்லோருக்கும் பொதுவாக ஓரிடத்தில் வைத்து, விருந்தினர்கள் தாங்களே உணவைத் தேர்ந்தெடுத்து தட்டில் எடுத்துக்கொண்டு நின்றுகொண்டு சாப்பிடும் எடுத்தூண் (Buffet) என்ற முறை தற்போது வழக்கத்திற்கு வந்துள்ளது.

செவ்வாய், 21 ஜூலை, 2020

எது சிறந்தது ? 4


சம்மணமிட்டு தரையில் அமர்ந்து சாப்பிடும் வழக்கத்தைக்  கொண்டிருந்த நாம், மேலை நாட்டு நாகரீகத்தை பார்த்து நாற்காலியில் அமர்ந்து, சாப்பிடும் மேசையில் உணவருந்தும் பழக்கத்தை கற்றுக்கொண்டதல்லாமல், தட்டைக் கையில் ஏந்திக்கொண்டு நின்றபடியே சாப்பிடும் முறையையும் பின்பற்றத் தொடங்கிவிட்டோம்.

ஞாயிறு, 12 ஜூலை, 2020

எது சிறந்தது ? 3





தரையில் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் வழக்கம் கொண்டிருந்த நாம், நாற்காலியில் அமர்ந்து, சாப்பிடும் மேசையில் உணவருந்தும் பழக்கத்தை மேலை நாட்டு நாகரீகத்தை பார்த்து கற்றுக்கொண்டோம் என நினைக்கிறேன். 

ஞாயிறு, 5 ஜூலை, 2020

எது சிறந்தது ? 2





பிறர் பரிமாற, அமர்ந்து உண்ணும் முறை பற்றி பார்த்துவிட்டு பின்னர்  நாமே எடுத்து தட்டில் போட்டு சாப்பிடும் எடுத்தூண் முறை பற்றி பார்ப்போம். 

ஞாயிறு, 21 ஜூன், 2020

எது சிறந்தது ? 1





தஞ்சையில் எங்களது வகுப்புத் தோழர்களின் மறக்கமுடியாத பொன் விழா சந்திப்பு  நடந்த போது உணவு சாப்பிட்ட முறை பற்றி எழுதும் போது எடுத்தூண் என்று Buffet முறையை குறிப்பிட்டிருந்தேன்.

ஞாயிறு, 14 ஜூன், 2020

தொடரும் சந்திப்பு 31





பொள்ளாச்சியிலிருந்து திரும்பி வந்த அன்றே (02-09-2018)  நண்பர் முத்தையாவை தொடர்புகொண்டு சந்திப்பு பற்றி சொல்லிவிட்டு அடுத்த சந்திப்பு 2020 ஆம் ஆண்டு சென்னையில் என்று சொன்னதும், உடனே ‘கவலை வேண்டாம்.நண்பர்கள் உதவியுடன் நாம் ஜமாய்த்துவிடலாம்.’ என்று அவர் சொன்னார் என்று எழுதியிருந்தேன் அல்லவா. ஆனால் நடந்ததோ வேறு.


ஞாயிறு, 31 மே, 2020

தொடரும் சந்திப்பு 30





அறிவுத் திருக்கோவில் இருந்த அருட்பெருஞ்சோதி நகரிலிருந்து நண்பருடன் புறப்பட்டு பொள்ளாச்சி சென்றடைந்தோம். அங்கு அடையார் ஆனந்த பவனில் காஃபி அருந்திட்டு புறப்பட்டு போக்குவரத்து நெரிசலில் நீந்தி கோவையை சென்றடைந்தோம்.

திங்கள், 25 மே, 2020

தொடரும் சந்திப்பு 29





எனது பயண திட்டத்தில் மாற்றம் செய்ததற்கு காரணம் ஒன்று உண்டு. தஞ்சையிலிருந்து நண்பர் பாலு பொள்ளாச்சி சந்திப்பு பற்றி சுற்றறிக்கை அனுப்பியவுடன், நிகழ்ச்சி பற்றிய விரிவான  சுற்றறிக்கைக்கு காத்திராமல், சந்திப்பில் பங்கேற்க சென்னையிலிருந்து காலையில் புறப்படும் கோவை விரைவு இரயிலில் 30-08-2018 அன்றும்,திரும்பிவர கோவையிலிருந்து 01-09-2018 அன்று இரவு 8.30 மணிக்கு புறப்படும் நீலகிரி விரைவு இரயிலிலும்,  28-05-2018 அன்றே முன் பதிவு செய்துவிட்டேன். அதுதான் நான் செய்த தவறு. 

ஞாயிறு, 17 மே, 2020

தொடரும் சந்திப்பு 28


நன்னன்  என்ற அந்த மன்னன், முனிவர் கொடுத்த மாம்பழத்தின் கொட்டையை நட்டு வளர்ந்த அதிசய மாமரத்தில் விளையப்போகும் கனியை யாரும் உண்டு விடாமலிருக்க அந்த மரத்திற்கு 24 மணி நேரமும் பயங்கர காவல் போட்டது மட்டுமல்லாமல். அம்மரத்தின், கிளைகளையோ, காய்களையோ, கனிகளையோ ஒருவரும் பயன்படுத்தக் கூடாது என்று ஆணையிட்டிருந்தானாம். 

வியாழன், 7 மே, 2020

தொடரும் சந்திப்பு 27


மாசாணி அம்மனின் சிலை படுத்த நிலையில் அங்கு ஏன் அமைந்துள்ளது என்பது பற்றி மூன்றுவிதமான வரலாறுகள் உள்ளன. அதில் எல்லோரும் சொல்லும் வரலாற்றை இங்கு தரலாமென நினைக்கிறேன். 

வியாழன், 23 ஏப்ரல், 2020

தொடரும் சந்திப்பு 26


நாங்கள் தங்கியிருந்த Great Mount Coco Lagoon ஓய்வகத்திலிருந்து மாசாணி அம்மன் கோவில் உள்ள ஆனைமலை 10 கி.மீ தொலைவுதான். நாங்கள் புறப்பட்ட நேரம் மதியம் 2.30 மணி என்பதால் சாலையில் அதிக வாகனங்கள் இல்லை. 

திங்கள், 13 ஏப்ரல், 2020

தொடரும் சந்திப்பு 25

காலை நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு அனைவரும்  குழுவாக புகைப்படம் எடுத்துக்கொள்ள குடில்களுக்கும் தென்னந் தோப்புகளுக்கும் இடையே  அமைந்திருந்த அடுக்கு இருக்கை கொண்ட வட்டரங்கத்திற்கு (Amphitheatre) சென்றோம்.

புதன், 1 ஏப்ரல், 2020

மற(றை)க்க முடியுமா?





சிண்டிகேட் வங்கியில் நேற்றுவரை பணி புரிந்தோருக்கும், பணி புரிந்து ஓய்வு பெற்றோருக்கும் இன்றைய நாள் ஒரு சோகமான நாள். காரணம் இன்று முதல் சிண்டிகேட் வங்கி என்ற மாபெரும் வங்கி,  கனரா வங்கியுடன் இணைந்து விட்டதால்  இனி சிண்டிகேட் வங்கி என்ற பெயருடன் அது தனித்து இயங்கப் போவதில்லை என்பதால் தான். 


வியாழன், 26 மார்ச், 2020

தொடரும் சந்திப்பு 24





எங்களது ஒவ்வொரு  சந்திப்பின்  முடிவிலும் அந்த சந்திப்பை சிறப்பாக நடத்தி முடித்த நண்பர்களை சிறப்பிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த சந்திப்பை மிகச் சிறப்பாக நடத்திய கோவை நண்பர்களான மீனாட்சிசுந்தரம், T.N.பாலசுப்பிரமணியன், செல்லப்பா ஆகியோருக்கு நினைவுப் பரிசு தந்து சிறப்பித்தோம்.

வெள்ளி, 20 மார்ச், 2020

தொடரும் சந்திப்பு 23


அந்த ஓய்வகத்தில் அறையை விட்டு வெளியேறும் நேரம் (Check Out Time) பகல் 12 மணி என்பதால், காலை சிற்றுண்டிக்குப் பின் அனைவரும் 10 மணி அளவில் அரங்கத்தில் கூடவேண்டும் என்றும், வரும்போதே அறையை காலி செய்துவிட்டு உடைமகளை எடுத்து வந்தால் அவைகளை அரங்கக்தில் வைத்துவிடலாம் என்றும் நண்பர் பாலு  சொல்லியிருந்தார். 

வியாழன், 12 மார்ச், 2020

தொடரும் சந்திப்பு 22







இரவு  நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு, சந்திப்பு நடந்த அரங்கிற்கு   அடுத்து இருந்த உணவு அருந்தும் இடத்திற்கு அனைவரும் சென்றோம். அங்கே எடுத்தூண் (Buffet) முறையில் இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சனி, 29 பிப்ரவரி, 2020

தொடரும் சந்திப்பு 21

Great Mount ‘COCO LAGOON’  ஓய்வகத்தின் உரிமையாளர் திரு T.சேதுபதி  அவர்கள் சிறப்புரையாற்றிவிட்டு சென்ற பின், ஓய்வகத்தின் கலைப் பிரிவு ஊழியர்கள் நடன நிகழ்ச்சிகளை நடத்தி எங்களை உற்சாகப்படுத்தினார்கள்.

செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

தொடரும் சந்திப்பு 20





நண்பர் நாச்சியப்பன் நடத்திய புதிர்போட்டிக்கு பிறகு இதுவரை நடைபெற்ற சந்திப்புகளில் வராமல் முதல் தடவையாக வந்தவர்களின் அறிமுகம் நடைபெற்றது. நண்பர் மீனாட்சிசுந்தரத்தின் துணைவியார் வந்து தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.

செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

தொடரும் சந்திப்பு 19





எங்களது பொள்ளாச்சி சந்திப்பில் நண்பர் நாச்சியப்பன் புதிர் போட்டி நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார் என்றும், அந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளையும் தந்திருந்தேன். அந்த கேள்விகளுக்கான பதில்களையும் அந்த முதற்கேள்வி எதற்காக கேட்கப்பட்டது என்பது பற்றியும் அடுத்த பதிவில் தருவதாக சொல்லியிருந்தேன். 

புதன், 15 ஜனவரி, 2020

பொங்கல் வாழ்த்து





பொங்கல் வாழ்த்து


பொங்கல் விழாவாம் தமிழர் திருநாளில்
எங்கும் நிறைந்த இறைவன் அருளினால்
பொங்கட்டும் பால்போல பாசமும் நேசமும் 
தங்கட்டும் எங்கும் அமைதியும் நல்லுறவும் 
நீங்கட்டும் நாட்டில் துயரமும் துன்மையுமென 
அன்புடன் வாழ்த்தும் வழுத்து

அன்பன் 
வே.நடனசபாபதி 

ஞாயிறு, 5 ஜனவரி, 2020

தொடரும் சந்திப்பு 18


நண்பர் நாச்சியப்பன் புதிர் போட்டி நிகழ்ச்சியை நடத்த ஆரம்பித்தபோது  போட்டியில் சிறுவர் சிறுமியர் மற்றும் மகளிர் மட்டும் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்றும் ஒருவேளை அவர்களால் பதில் அளிக்க இயலவில்லை என்றால் எங்களுக்கு  பதில் அளிக்க வாய்ப்பு தரப்படும் என்றும், சரியான  பதிலை சொல்வோருக்கு ரூபாய் 100 பரிசாகத் தரப்படும் என அவர் அறிவித்தார் என சொல்லியிருந்தேன்.