வெள்ளி, 26 செப்டம்பர், 2014

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 13



சேலம் மத்திய சிறையிலிருந்த அந்த ஏமாற்றுப்பேர்வழியை நீதிமன்றம் 

உள்ள ஊருக்கு செல்ல பேருந்து நிலையம் அழைத்து சென்றபோது, 

சேலத்தில்  நான்கு ரோடு எனப்படும் நான்கு சாலைகள் சந்திக்கும் 

இடம் வந்ததும், அந்த நபர் தன்னை அழைத்துப் போக வந்த 

காவலர்களிடம்  ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். 

வியாழன், 18 செப்டம்பர், 2014

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 12




ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்கள். அதோடு ஏமாற்றுவோர்களும் திருடுபவர்களும் சும்மா இருக்கமாட்டார்கள் 

என்றும் சொல்லலாம். ஒரு மாவட்ட ஆட்சியாளரையே ஏமாற்றிவிட்டதால் 

நமது கதாநாயகனுக்கு துணிவு வந்து மேலும் மாவட்டத்தில் உள்ள மற்ற 

முதன்மை அதிகாரிகளிடம் தனது வேலையைக் காட்டத் துணிந்துவிட்டார்.

திங்கள், 15 செப்டம்பர், 2014

பல்திறப் புலமை விருதும் நானும்!




இன்று தேவகோட்டை திரு KILLERGEE அவர்கள் தனது பூவை பறிக்க கோடரி எதற்கு? என்ற வலைப்பதிவில்  என்னையும் சேர்த்து ஐந்து வலைப்பதிவர்களுக்கு  பல்திறப் புலமை விருது (The Versatile BloggerAward ) கொடுத்து கௌரவப்படுத்தியிருக்கிறார். அவருக்கு எனது மனமார்ந்த 
நன்றி!

வெள்ளி, 5 செப்டம்பர், 2014

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 11



FIR வாங்கி வர அந்த காவல் நிலையத்திற்கு சென்றபோது கிடைத்த 

வரவேற்பு முன்பு கிடைத்ததிலிருந்து மாறுபட்டிருந்ததை என்னால் 

அறியமுடிந்தது. என்னை அழைத்து சென்ற எங்களது வாடிக்கையாளரைக் 

கண்டதும் அந்த காவல் நிலைய ஆய்வாளர் முகத்தில் புன்முறுவலோடு 

எழுந்து நின்று வாங்க அண்ணே. வணக்கம்.உட்காருங்கள் என்று 

சொல்லி வரவேற்றார். பிறகு எங்களுக்கு தேநீர் வாங்கித் தந்து 

உபசரித்தார்.