சனி, 29 ஏப்ரல், 2017

எழுத்தாளர் வே.சபாநாயகம் நினைவு சிறுகதைப் போட்டி

கல்வியாளரும் எழுத்தாளருமான என் அண்ணன் திரு சபாநாயகம் அவர்கள் இயற்கை எய்தி 10 திங்கள் ஆகிவிட்டன என்பதை இன்னும் எங்களால் நம்ப இயலவில்லை. இன்னும் அவர் எங்களோடு இருப்பது போலவே நாங்கள் உணர்கிறோம்.

வியாழன், 27 ஏப்ரல், 2017

குமுதமும் விகடனும் – சிறுகதைத் தொகுப்பு 1 – நூல் ஆய்வு

மூத்த வலைப்பதிவர் திரு வை கோபாலகிருஷ்ணன் அவர்கள் 30-03-2017 அன்று ‘மின்னல் வேகத்தில் மின்னூல்கள்’ என்ற தலைப்பில் வெளியிட்டிருந்த பதிவில் மின்னூல்கள் (e-books) பற்றி குறிப்பிட்டு, அவருடைய 10 படைப்புகள் குறுகிய காலத்தில் மின்னூல்களாக வெளிவந்திருப்பதாக எழுதியிருந்தார். சகோதரி திருமதி கலையரசி அவர்களுடைய படைப்புகளும் மின்னூல் வடிவில் வந்திருப்பதாக எழுதியிருந்தார்.

புதன், 19 ஏப்ரல், 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 20

மாலை 6 மணிக்குள் பார்வை நேரம் முடிந்துவிடுவதால் அவசரம் அவசரமாக சரஸ்வதி மகால் நூலகத்திற்குள் நுழைந்தோம். ஆனால் எங்கள் அதிர்ஷ்டம் அங்கே வேறு விதமாக இருந்தது. நாங்க சென்ற பொழுது அங்கே ஒரு பகுதியில் சீரமைப்புப் பணிகள் நடந்துகொண்டு இருந்ததால் எங்களால் முழுதும் பார்க்க இயலவில்லை.

வெள்ளி, 7 ஏப்ரல், 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 19

மன்னர் சரபோஜி சிலையைப் பார்த்தபின் கலைக்கூடத்தில் உள்ள தொல்பொருள் சின்னங்களைப் பார்க்க சென்றோம். உள்ளே சென்றபின்தான் தெரிந்தது காமிராவை கையோடு கொண்டுசெல்லாதது எவ்வளவு தவறு என்று. முன்பே எழுதியிருந்தபடி அரண்மனையைப் பார்த்துவிட்டு நேரே பெரிய கோவிலுக்கு செல்ல இருந்ததால் காமிராவை எடுத்துச் செல்லவில்லை.