செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 35

அனைவரும் மதிய உணவு முடித்த பின் கூட்டம் தொடங்க இருக்கும்போது கோவையில் உள்ள நண்பர்கள் மீனாட்சிசுந்தரமும், T.N பாலசுப்ரமணியனும் என்னிடம் வந்து ‘நடனம். இந்த முறை நாங்கள் கோவையில் சந்திப்பை நடத்தும் பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.’ என்று சொன்னார்கள்.

வியாழன், 24 ஆகஸ்ட், 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 34

மதிய உணவு அருந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தென்னந்தோப்பில் சைவம் மற்றும் அசைவம் உண்ணுபவர்களுக்கு தனித்தனி இடங்களில் வரிசையாய் மேசைகளும் நாற்காலிகளும் போடப்பட்டு இருந்தன. தஞ்சை நண்பர்கள் குழு சார்பாக நண்பர் நாகராஜன் அவருடைய மகன் திரு சாமிநாதன் மூலம் அங்கே சுவையான சைவ மற்றும் அசைவ உணவுகளை பரிமாற ஏற்பாடு செய்திருந்தார்.

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 33


ஓய்வுக் கொட்டகைக்கு சென்று காயலை பார்த்துவிட்டு திரும்பி வந்ததும், எங்களை அங்கு பாதுகாப்பாக அழைத்து வந்த எல்லா படகோட்டிகளையும் நாங்கள் பயணித்த படகில் அமரச்செய்து படம் எடுத்தேன்.

திங்கள், 14 ஆகஸ்ட், 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 32

முத்துப்பேட்டை காயலின் ஆழமே வெறும் 4 அடிக்குள் தான் இருக்கும் என்பதால் நாங்கள் பயணித்த அந்த ஜம்புவானோடையின் ஆழம் எவ்வளவு இருக்குமோ என படகில் பயணிக்கும்போது யோசித்துக்கொண்டு இருந்தேன்.ஆனால் ஓடையில் சிறிது தூரம் பயணம் செய்வதற்குள்ளேயே அங்கு மீன் பிடித்துக்கொண்டு இருந்தவர்களைப் பார்த்ததும் எனக்கு அதனுடைய ஆழம் எவ்வளவு என்பது தெரிந்துவிட்டது.

புதன், 9 ஆகஸ்ட், 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 31

அண்ணாமலை நகரில் 2011 ஆம் ஆண்டு நடந்த எங்களின் சந்திப்பின் போது பிச்சாவரத்தில் 14-08-2011 நாங்கள் மேற்கொண்ட படகுப் பயணமும், அதுபற்றி பிரிந்தவர் கூடினால் ....???????? என்ற தலைப்பில் நான் எழுதிய பதிவும், இந்த காயல் பயணத்தின்போது கண்டல் தாவரங்களை (Mangroves), பார்த்த போது என் மனதில் நிழலாடின.