செவ்வாய், 30 நவம்பர், 2010

எனது ஓவியங்கள் 10

கீழே உள்ள படங்கள் ' மாயா சித்ராலயா'அனுப்பிய

படங்களைப்பார்த்து 09 -01-1977 அன்று வரைந்தது.






கீழே உள்ள படம் ,' கல்கி' பத்திரிக்கையில்

திரு வினு அவர்கள் வரைந்திருந்த

படத்தைப்பார்த்து 07 -02-1977 அன்று வரைந்தது.




'Indian Ink' உபயோகித்து மேலே உள்ள

மூன்று படங்களையும் வரைந்திருந்தேன்



கீழே உள்ள படங்களும் 'மாயா சித்ராலயா'

அனுப்பிய படங்களைப்பார்த்து வரைந்ததுதான்.

வரைந்த நாள்: 09 -05-1977










வேறு சில படங்கள் அடுத்த பதிவுகளில்.

வெள்ளி, 26 நவம்பர், 2010

எனது ஓவியங்கள் 9

கீழே உள்ள படம் , 'தினமணி கதிர்'

பத்திரிக்கையில் வந்த படத்தைப்பார்த்து

06 -12-1976 அன்று வரைந்தது.



'பாவை விளக்கு' மேலட்டையில்

வந்த படத்தை பார்த்து 06 -12-1976

அன்று வரைந்த படத்தை

கீழே தந்திருக்கிறேன்.



கீழே உள்ள படம் , ஆனந்த விகடன்

பத்திரிக்கையில் வந்த படத்தைப்பார்த்து

06 -12-1976 அன்று வரைந்தது.





இந்த படத்திற்கு 'Good' என

திரு மாயா அவர்கள் மதிப்பிட்டிருந்தாலும்

45 மதிப்பெண்கள்தான் கொடுத்திருந்தார்.


மேலே உள்ள மூன்று படங்களையும்

'Indian Ink'

உபயோகித்து வரைந்தேன்.



கீழே உள்ள படம் , 'மங்கை' இதழில்

வந்த படத்தைப்பார்த்து Ball Pen ஆல்

நேரடியாக வரைந்தது.

வரைந்த நாள் 27 -12-1976 .




வேறு சில படங்கள் அடுத்த பதிவுகளில்.

ஞாயிறு, 21 நவம்பர், 2010

எனது ஓவியங்கள் 8

பழைய பதிவுகளில் சொல்லியதுபோல்

அஞ்சல் மூலம் ஓவியம் கற்றபோது

அவர்கள் அனுப்பிய படங்களை

பார்த்து போட்ட படங்களையும்,

மற்ற இதழ்களில் வந்த படங்களை

பார்த்து போட்ட படங்களையும்

கீழே தந்திருக்கிறேன்.


கீழே உள்ள படம் , 'ஆனந்த விகடன்'

அட்டைபடத்தைப்பார்த்து, 18 -10-1976 அன்று

வரைந்தது.ஆனால் இந்த படம் எனக்கு

முழு நிறைவை தரவில்லை.காரணம்

அழிப்பான் (Eraser) உபயோகப்படுத்தாமல்

நேரடியாக Ball Point பேனாவால்,

வரைந்ததால் சிறு தவறுகளை

திருத்த இயலவில்லை.




கீழே உள்ள படம் , ஒரு பத்திரிக்கையில்

வந்த புகைப்படத்தைப்பார்த்து

24 -10-1976 அன்று வரைந்தது.

அப்போதுதான் தெரிந்தது,

புகைப்படத்தைப்பார்த்து வரைவது

அவ்வளவு சுலபமல்ல என்று.





கீழே உள்ள படங்கள் அஞ்சல் வழி

பாடங்களைப்பார்த்து 24 -10-1976

அன்று வரைந்தது.








வேறு சில படங்கள் அடுத்த பதிவுகளில்.

புதன், 17 நவம்பர், 2010

எனது ஓவியங்கள் 7

மாயா சித்ராலயாவில் அஞ்சல் மூலம் ஓவியம்

கற்றபோது அவர்கள் அனுப்பிய படங்களை

பார்த்து போட்ட படங்களையும், மற்ற

இதழ்களில் வந்த படங்களை பார்த்து

போட்ட படங்களையும் கீழே தந்திருக்கிறேன்.



கீழே உள்ள படம், எனக்கு வந்த வாழ்த்து

அட்டையைப்பார்த்து 28 -01-1976 அன்று வரைந்தது.





கீழே உள்ள படங்கள் அதே நாளில் அஞ்சல் வழி

பாடங்களைப்பார்த்து வரைந்தது.









கீழே உள்ள படம்,'கல்கி'யில் வந்த

அட்டைபடத்தைப்பார்த்து

11 -10-1976 அன்று வரைந்தது.







வேறு சில படங்கள் அடுத்த பதிவுகளில்.

ஞாயிறு, 14 நவம்பர், 2010

எனது ஓவியங்கள் 6

1976-1980 களில் மணிப்பாலில் பணி புரிந்தபோது ,

உடுப்பில் தங்கியிருந்தேன்.

அங்கு உடுப்பி பாரத ஸ்டேட் வங்கியில்

மேலாளராக இருந்த திரு C.S.இராதாகிருஷ்ணன்

அவர்களது மகன் திரு ஸ்ரீதர் எனது

ஓவியங்களைப்பார்த்துவிட்டு'நீங்கள் ஏன் ஓவியர்

திரு மாயா நடத்தும்,மாயா சித்ராலயாவில்

சேர்ந்து முறைப்படி அஞ்சல் மூலம் ஓவியம்

கற்கக்கூடாது?' என சொன்னார்.


அவரும் அதில் சேர்ந்து ஓவியம் கற்று வருவதாக

சொன்னதும்,நானும் உடனே சேர்ந்துவிட்டேன்.

மாதம் ரூபாய் 12 தான் கட்டணம்.

படிப்பு காலம் இரண்டு ஆண்டுகள்.


முதலில் பென்சில் உபயோகித்து வட்டங்கள்,

கோடுகள், வளைவுகள் போடவேண்டும். பின்பு

அவர்கள் அனுப்பும் படங்களைப்பார்த்து

போடவேண்டும்.


படங்களை அஞ்சலில் அனுப்பினால்

ஓவியர் திரு மாயா அவர்களே அதை திருத்தி

அவரது குறிப்புகளோடு அனுப்புவார். நம்மையும்

காணும் சில பொருட்களை பார்த்து படம்

போட்டு பழகச்சொல்லுவார்.


பென்சிலால் போட்டு பழகியபின், இந்தியன் இங்க்

உபயோகித்து படம் போடவேண்டும். பின்பு பிரஷ்

மூலம் படம் போட பழக்குவார்கள். கடைசியில்

வண்ணபடங்கள் போடுவதையும் சொல்லித்தருவார்கள்.

இடையிடையே தேர்வுகளும் உண்டு.


பணிச்சுமை காரணமாக என்னால்

பதினெட்டு மாதங்களுக்கு பிறகு அஞ்சல்

படிப்பை தொடர இயலவில்லை.

ஆனாலும் முறைப்படி ஓவியம் வரைவது

எப்படி என்பதை கற்றுக்கொண்டது நிஜம்.


திரு மாயா அவர்கள் மிகவும் பொறுமையோடு

எனது பா(ப)டங்களை திருத்தி என்னை

வழி நடத்தியதை இந்த நேரத்தில்

சொல்லியே ஆகவேண்டும். ஒருவேளை

முழுமையாக அவரிடம் பயின்றிருந்தால்

நல்ல ஓவியனாகியிருப்போனோ என்னவோ!!


மாயா சித்ராலாயாவில் 1976-1977 களில்,

ஓவியம் கற்றபோது போட்ட

சில படங்களை அடுத்த பதிவுகளில்,

வெளியிட இருக்கிறேன்.

புதன், 3 நவம்பர், 2010

எனது ஓவியங்கள் 5

கீழே உள்ள படங்கள் பொள்ளாச்சியில் பணி

புரிந்தபோது,குமுதத்தில் வந்த கார்ட்டூன்களைப்பார்த்து,

27 -03-1971 அன்று Ball Point பேனாவால் இரவு 9 .15 மணிக்கு

வரையப்பட்டது









குமுதத்தில் வந்த அப்புசாமியும் சீதாப்பாட்டியும்

என்ற கதைக்கு,ஓவியர் திரு ஜெயராஜ் அவர்களால்

வரையப்பட்ட படத்தைப்பார்த்து 21- 06 -1971 ல்

இரவு 9 .10 க்கு வரைந்த படம் கீழே.






கீழே உள்ள படம் குமுதத்தில் வந்த திரு கருணாநிதி

அவர்களுடைய படத்தைப்பார்த்து,20-07-1972 ல்

இரவு 10.25 க்கு வரையப்பட்டது.






1973 மார்ச் மாதம் பட்டதாரி ஆசிரியர்கள் வேலை

நிறுத்தம் செய்தபோது,அதை எவ்வாறு தமிழக அரசு

கையாண்டது என்பதை குறிக்கும் விதமாக குமுதம்

28- 03 -1973 தேதியிட்ட இதழில் வெளியிட்ட

கார்ட்டூனைப்பார்த்து,25- 03 -1973 ந்தேதி

இரவு 10 .05 க்கு வரைந்த படம் கீழே.







இவைகள் யாவும் Free Hand ல் அழிப்பான் (Eraser)

உபயோகப்படுத்தாமல் வரைந்ததுதான் .





வேறு சில படங்கள் அடுத்த பதிவுகளில்.