புதன், 25 மே, 2016

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.27


1986 ஆம் ஆண்டு மய்ய அரசு நாடெங்கிலும் நவோதயா பள்ளிகள் நிறுவ முயற்சி செய்தபோது அந்த பள்ளிகளில் இந்தி கற்பது கட்டாயமாக்கப்படும் என அறிந்ததும் திமுக அதை எதிர்த்தது என்றும் தமிழகம் முழுதும் நவம்பர் 17 ஆம் நாள் அந்த கட்சியின் உறுப்பினர்கள் மய்ய அரசின் கல்விக் கொள்கைக்கெதிராக, அரசியலமைப்பின் பதினேழாவது பகுதியைக் தீயிலிட்டு போராட்டம் நடத்தியபோது திரு கருணாநிதி உட்பட 20,000 க்கு மேற்பட்ட திமுக தொண்டர்கள் கைதாயினர் மற்றும் அந்த போராட்டத்தின் போது 21 பேர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர் என்றும் சொல்லியிருந்தேன்.

வியாழன், 5 மே, 2016

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.26


1965 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம், 1967 ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், அன்றைய முதல்வர் அறிஞர் அண்ணா அவர்கள் போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை ஏற்று அதற்கான தீர்மானத்தை 1968 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 23 ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றிய பிறகு, இந்தி திணிப்பு எதிர்ப்பாளர்கள் தங்கள் போராட்டத்தை விலக்கிக்கொண்டதால், மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பியது.