செவ்வாய், 24 மே, 2011

வங்கியாளர்களைப் பற்றிய நகைச்சுவை 6

ஒரு குடியிருப்பைச் சேர்ந்த அனைவரும் கோடை
விடுமுறை நாட்களில் ஒன்றாக வெளியூர் செல்ல
எண்ணினார்கள். வெளிநாடு சென்று வரலாமே என
சிலர் யோசனை தெரிவித்தபோது, அதை எல்லோரும்
முழு மனதோடு ஒத்துக்கொண்டு,வெளிநாடு செல்ல,
ஒரு பயண ஏற்பாடு செய்யும் நிறுவனத்திடம் பணத்தை
செலுத்தி, குறிப்பிட்ட நாளில் பயணத்தை தொடங்கினர்.

அவர்கள் சென்ற விமானத்தில் பெரும்பாலோர் அவர்கள்
குழுவைச் சேர்ந்தவர்கள் ஆதலால், விமானப் பயணம்
தொடங்கியது முதல் ஒரே கொண்டாட்டம் தான்.

அவர்கள் மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை.காரணம்
விமானம் நடுக்கடலின் மேலே சென்று கொண்டிருந்த
போது விமான ஒட்டி செய்த ஒரு அறிவிப்புதான்.
திடீரென விமானத்தின் இன்ஜின்கள் பழுதடைந்ததால்
விமானத்தை அருகில் ஏதேனும் தீவு இருந்தால் அங்கே
கீழே இறக்கபோவதாகவும், எல்லோரும் தயாராக
இருக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.

திடீரென எல்லோருடைய மகிழ்ச்சியும் காணாமல்
போய் அனைவரும் தங்களது இஷ்ட தெய்வத்திடம்
வேண்டத் தொடங்கிவிட்டார்கள்

நல்ல வேளையாக விமானியும், ஒரு ஆள் அரவமற்ற,
அனாந்தர தீவில் எந்தவித சேதாரமும், யாருக்கும்
ஏற்படாவண்ணம் சாமர்த்தியமாய் விமானத்தை
இறக்கிவிட்டார்.

எல்லோரும் பத்திரமாக தரை இறக்கியதற்கு
விமானிக்கு நன்றி சொன்னபோது அவர் ‘எனக்கு
நன்றி சொல்லவேண்டாம். இறைவனுக்கு நன்றி
சொல்லுங்கள்.

அதோடு இந்த தீவில் நம்மை யாராவது
வந்து காப்பாற்றும் வரை உயிர் வாழ தேவையான
எதுவுமே இல்லை. மேலும் இந்த தீவிற்கு அருகில்
ஆழம் இல்லாததால் கப்பல்கள் கூட வர வாய்ப்பு
இல்லை. எனவே யாராவது வந்து நம்மை காப்பாற்றி
அழைத்து செல்ல இறைவன் அருள் புரியவேண்டி
பிரார்த்திப்போம்.

இல்லாவிடிலோ அனைவரும் உண்ண உணவு இல்லாமல்,
எந்த வித உதவியும் கிடைக்காமல், அனாதைபோல்
மடியவேண்டியதுதான்.’ என்று சொன்ன பின்தான்
எல்லோருக்கும் தாங்கள் ஒரு ஆபத்திலிருந்து தப்பி,
இன்னொரு பேராபத்தில் சிக்கியிருக்கிறோம்
எனப்புரிந்தது.

அவ்வளவுதான் பழையபடி எல்லோரும் அலறத்
தொடங்கிவிட்டார்கள். வயதான தாய் தந்தையரை
யார் பார்த்துக்கொள்வார்கள் என்று சிலரும்,
மகளுக்கு திருமணம் நடத்த தாம் இல்லாமல்
போய்விடுவோமே என்று சிலரும், வாழவேண்டிய
வயதில், எல்லா வசதி இருந்தும்,வாழ்க்கையை
அனுபவிக்காமல் அற்பாயிசில் போகப்போகிறோமே
என்று பலரும் அழுதுகொண்டு, கடவுளிடம் காப்பாற்ற
வேண்டிக்கொண்டிருந்த போது அந்த குழுவில் இருந்த
ஒருவர் மட்டும், சந்தோஷமாக சிரித்துக்கொண்டு
கவலைப்படாமல் இருந்தார்.

அதைப்பார்த்த அனைவரும், கோபத்தோடு ‘என்ன,
நாங்கள் எல்லோரும் கவலையோடு இருக்கையில்,
நீ மட்டும் கவலைப்படாமல், சிரித்துக்கொண்டு
இருக்கிறாயே? உனக்கு என்னவாயிற்று?’ எனக்
கேட்டபோது, அவர் ‘அது ஒன்றுமில்லை.
நான் XYXYX வங்கியில் இந்த மாதம் கிரெடிட்
கார்டுக்கான பணம் ரூபாய் 50,000 கட்டவேண்டும்.
அதை எப்படி கட்டுவது என எண்ணிக்கொண்டிருந்தேன்.
நல்ல வேளை. தப்பித்தேன் என நினைத்து
சிரித்துக்கொண்டு இருக்கிறேன்.’ என்றார்.

அப்போது அதைக் கேட்ட விமான ஒட்டி உற்சாகம்
பொங்க சொன்னார்,‘பயணிகளே. கவலை வேண்டாம்.
நாம் அனைவரும் பத்திரமாக ஊர் போய் சேர்ந்துவிடலாம்.
ஏனெனில் அந்த வங்கிக்காரர்கள் பணம் கட்டத்தவறிய
வாடிக்கையார்கள் எங்கிருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து
விடுவார்கள். அப்படி அவர்கள் இந்தநண்பரைத்
தேடிவரும்போது அவர்கள் உதவியுடன்
நாம் தப்பிவிடலாம்’ என்றார்!

நகைச்சுவை துணுக்குகள் தொடரும்

7 கருத்துகள்:

  1. சில வங்கிகளில் கடன் அட்டை வாங்கிச் சொல்லொணாத்துயரம் அடைந்தவர் பலர்!அத்தகைய உன்மையை நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறீர்கள்!

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  3. Surely, the credit card holder who was all smiles earlier must have been disheartened at the prospect of being traced by the Banker. Nice episode. Vasudevan

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே!

    பதிலளிநீக்கு
  5. வங்கிகள் தரும் கிரெடிட் கார்டு தொல்லைகளை நகைச்சுவையோடு கூறியுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கும் தங்களது மேலான கருத்துக்கும் நன்றி திரு முரளி நாராயண் அவர்களே!

    பதிலளிநீக்கு
  7. வருகைக்கும் தங்களது மேலான கருத்துக்கும் நன்றி திரு முரளி நாராயண் அவர்களே!

    பதிலளிநீக்கு