ஞாயிறு, 30 டிசம்பர், 2012

வாடிக்கையாளர்களும் நானும் 21



கேரளாவில் இருந்த எங்கள் வங்கியின் கிளை ஒன்றில் 
முதன்மை மேலாளராக நான்கு ஆண்டுகள் 
பணியாற்றிக்கொண்டு இருந்தபோது நடந்த நிகழ்வு 
சுவாரஸ்யமானது.

கேரளாவைப் பொறுத்தவரையில் அங்கு உள்ள
எல்லா வங்கிக் கிளைகளிலும் NRE Deposit எனப்படும்   
வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் வைத்துள்ள 
வைப்புத் தொகைகள் கணிசமாக இருக்கும்.

(1996-1997 ல் (அதாவது நான் பணிபுரிந்த சமயம்) 
கேரளாவிற்கு வெளிநாட்டில் பணிபுரிவோர் அனுப்பிய 
தொகை 9999.62 கோடி ரூபாய்கள் என்றும் அதில் 
வங்கிகள் மூலம் செலுத்தப்பட்டவை மட்டும் 2075 கோடி 
ரூபாய்கள் என்கிறது புள்ளிவிவரம். இப்போது 
இது பன் மடங்காயிருக்கும் என்பதில் ஐயம் இல்லை.)

ஓணம் மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு சொந்த 
ஊருக்கு வரும் வெளிநாட்டில் பணிபுரிவோர் தாங்கள் 
சம்பாதித்து சேர்த்த பணத்தை வங்கிக் காசோலையாக 
கொண்டு வந்து வங்கிகளில் அதை வைப்புத்
தொகையாக வைப்பது வழக்கம்.

எனவே வங்கிகள் செப்டம்பர் மாதத்தில் ஆரம்பித்து 
ஜனவரி மாதம் வரை வெளி நாட்டு இந்தியர்களின் 
வருகையால் களை கட்டி இருக்கும். அந்த சமயம் 
முதிர்வு அடைந்த வைப்புத்தொகைகளை திரும்பவும் 
புதுப்பிப்பதும் புதிய வைப்புக்களை பெறுவதும் 
போன்ற பணிகளில் வங்கிகள் மும்முரமாக இருக்கும்.
   
அதே நேரத்தில் NRE வாடிக்கையாளர்களும் தாங்கள் 
கொண்டுவரும் காசோலைகளை மாற்றி அவர்கள் 
கணக்கு வைத்திருக்கும் கிளைகளிலேயே 
வைப்புத்தொகையாக வைப்பார்கள் எனவும் 
சொல்லமுடியாது. 

ஊரில் உள்ள அனைத்து வங்கிகளிலும் விசாரித்துவிட்டு, 
எந்த வங்கி அதிக நாணய மாற்று விகிதம் 
(Exchange Rate) தருகிறதோ அந்த வங்கியில்தான் 
அவைகளை Deposit செய்வார்கள்.இதை என் னுபவத்தில் 
நேரடியாகவே கண்டேன். 

ஒரு கிறிஸ்துமஸ் வாரத்தின் போது ஒரு நாள்  
NRE வாடிக்கையாளர் ஒருவர் தன் மனைவி மற்றும் 
இரு குழந்தைகளோடு வந்தார். நேரே எனது அறைக்கு 
வந்தவர் தன்னிடம் ரூபாய் 50 இலட்சத்திற்கான 
வெளி நாட்டு காசோலை இருப்பதாகவும், அன்றைய 
 Exchange Rate என்ன என்று தெரிந்தால் அதை 
எங்கள் வங்கியிலேயே வைப்பாக வைக்க 
விரும்புவதாகவும் சொன்னார்.

அப்போதெல்லாம் NRE வாடிக்கையாளர்களை கவர 
சந்தையில் இருக்கும்  Exchange Rate விட கொஞ்சம் 
அதிகம் தருவது எல்லா வங்கிகளும் கடைபிடிக்கின்ற 
நடமுறைதான். 

ஆனால் Finer Rate என சொல்லப்படுகின்ற அந்த 
சலுகையை கிளைகள் மட்டத்தில் தர முடியாது. 
வங்கியின் குறிப்பிட்ட இடங்களில் உள்ள Dealing Centre 
எனப்படும் அந்நிய செலாவணிகளை கையாளும் 
இடத்தில் Dealer கள் எனப்படும் அலுவலர்கள்தான் 
Quote செய்வார்கள்.

எனது கிளை பெங்களூருவில் இருந்த எங்கள் 
வங்கியின் அந்நிய செலாவணி மய்யத்துக்கு 
ஒதுக்கப்பட்டு இருந்ததால், உடனே  பெங்களூரு 
அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு விவரம் 
சொல்லி நல்ல Rate ஐ தருமாறு கேட்டேன்.

அதற்குள் வந்திருந்த வாடிக்கையாளருக்கும், அவர் 
குடும்பத்தாருக்கும் குளிர்பானங்கள் வரவழைத்துக் 
கொடுத்து அவர்களோடு பேசிக்கொண்டு இருந்தேன். 
சிறிது நேரத்தில் பெங்களூருவிலிருந்து Rate  
சொன்னார்கள்.

அதை சொல்லிவிட்டு சார். நீங்கள் எவ்வளவு 
காலம் வைப்பு வைக்க இருக்கிறீர்கள் என்றேன். 
அதற்கு அவர் என்னிடம், கொஞ்சம் இருங்கள் இதோ 
வருகிறேன். என்று சொல்லிவிட்டு அவரது 
குடும்பத்தினரை எனது அறையிலேயே இருக்க 
சொல்லிவிட்டு வெளியே சென்றார். 
 
சிறிது நேரம் கழித்து வந்த அவர் சாரி சார். அருகில் 
உள்ள இன்னொரு நாட்டுடைமையாக்கப்பட்ட 
வங்கியில் உங்கள் Rate விட கூட தருகிறேன் 
என்கிறார்கள்.எனவே அங்கேயே வைப்புத் 
தொகையை வைக்க விரும்புகிறேன் எனக்
கூறிவிட்டு சென்றுவிட்டார்.

எனக்கு அதுதான் முதல் அனுபவம். வைப்பு கிடைக்கும் 
என நினைத்து முயற்சித்தது வீணாகிவிட்டதே 
என வருத்தப்பட்டு  சக அலுவலர்களிடம் 
சொன்னபோது அவர்கள், 'சார்.NRE வாடிக்கையாளர்கள் 
எல்லோரும் விவரமானவர்கள். நமது நிரந்தர 
வாடிக்கையாளரானாலும், நம்மிடம் Rate கேட்டு 
வாங்கிக்கொண்டு போய் அதை வேறொரு வங்கியில் 
சொல்லி அவர்களிடம் அதைவிட அதிக Rate வாங்குவது 
வழக்கமான ஒன்றுதான். கவலை வேண்டாம். என 
சொல்லி சமாதானப்படுத்தினார்கள். 

அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்திற்கு அதிக 
இலாபம் கிடைக்கும் வங்கிகளில் முதலீடு செய்வதை 
நாம் குறை சொல்லமுடியாது என நான் 
நினைத்துக்கொண்டேன். 

ஆனால் எல்லா வாடிக்கையாளர்களும் அப்படி 
இருக்கமாட்டார்கள் என்பதை வேறொரு நிகழ்வு 
எனக்கு உணர்த்தியது. 

ஒருதடவை ஓணம் விழா தொடங்க ஒரு வாரம் 
இருக்கும்போது ஒரு நாள் காலை ஒரு வாடிக்கையாளர் 
எனது அறைக்கதவை திறந்து உள்ளே வரலாமா?’ என்று 
கேட்டார். 

நான் அவரை நிமிர்ந்து பார்த்து, வாருங்கள் 
திரு கிருஷ்ண வாரியர் அவர்களே?’ என்றதும் அப்படியே 
அசந்து நின்று விட்டார்.


அனைவருக்கும் எனது புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!


தொடரும்

16 கருத்துகள்:

  1. இவ்வளவு விஷயம் உள்ளதா?
    புத்தாண்டு வாழ்த்துகள்

    சார் இதையும் படியுங்களேன்

    http://kaviyazhi.blogspot.com/2012/12/blog-post_30.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி திரு கவியாழி கண்ணதாசன் அவர்களே! உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்!

      நீக்கு
  2. ஒருவருடைய பெயரைச்சொல்லி அழைத்தால் யாரும் மயங்கி விடுவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! நீங்கள் சொல்வதும் சரிதான்.

      நீக்கு
  3. ஆமாம் எப்படி அவர் பெயர் தங்களுக்கு தெரிந்தது ?
    தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி திருமதி சசிகலா அவர்களே!அவரது பெயர் எப்படித் தெரிந்தது என்பதை அடுத்த பதிவில் தெரிந்துகொள்வீர்கள். தொடர்வதற்கு நன்றி.

      நீக்கு
  4. வங்கி நடவடிக்கைகளில்தான் எவ்வளவு தகவல்கள் உள்ளன?
    .

    பதிலளிநீக்கு
  5. வங்கி நடைமுறைகள் பற்றி அறிந்துகொள்ள உதவும் தகவல் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

    இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே! தங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

      நீக்கு
  6. உங்கள் நினைவாற்றல் அபாரம்!
    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு குட்டன் அவர்களே! தங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

      நீக்கு

  7. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


    அன்புடன்
    மதுரைத்தமிழன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துக்கு நன்றி திரு மதுரைத்தமிழன் அவர்களே! உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் எனது புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

      நீக்கு
  8. அன்பின் நடன சபாபதி - வாடிக்கையாளர்கள் நம்மை விட கெட்டிக் காரரகள் - பல வங்கிகளைத் தொடர்பு கொள்வார்கள் - பல்வேறு காரணங்களினால் நம்மால் அதிக மாற்று விகிதம் அளிக்க இயலாது. வர வேண்டிய பெரும் வைப்புத்தொகை நம் கை ந்ழுவிப் போய் விடும். என்ன செய்வது -

    பெயர் கூறி வாடிக்கையாளர்களை வரவேற்பது அவர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழுத்தும் . நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சீனா அவர்களே!

      நீக்கு