அப்போதெல்லாம் ஆங்கில பாடம் சொல்லிக்கொடுக்கும்
ஆசிரியர்கள் வகுப்பு ஆசிரியராக இருப்பார்கள்.
அவர்கள் ஆங்கிலம் அல்லாமல் வேறொரு பாடமும் எடுப்பார்கள்.
அப்படி எங்களுக்கு ஒன்பதாம் வகுப்பு ஆசிரியராக இருந்த
M.R.G என அன்புடன் அழைக்கப்பட்ட திரு.M.R.கோவிந்தசாமி அவர்கள்,
ஆங்கிலத்தோடு சமூகவியல் (Social Studies ) பாடமும் நடத்தினார்.
அவருடைய வகுப்பு என்றாலே எங்களுக்கு சந்தோஷம் தான். ஆங்கில படத்தையும், சமூக பாடத்தையும் எல்லோருக்கும் புரியும் வண்ணம் நகைச்சுவையோடும்,உவமையோடும் அவர் நடத்தியதால்,அவரது வகுப்புகளை எவரும் தவற விட்டதில்லை.
சமூக இயல் பாட வகுப்பு என்றால், அநேகருக்கு நான் முன்பே சொன்னதுபோல் அது எட்டிக்காய்தான்.
அந்த பாடத்தில் வரும் வரலாற்று சம்பவங்களையும் அது நடைபெற்ற வருடங்களையும், தேதிகளையும் நினைவில்
இருத்தி தேர்வை எதிர்கொள்வது கடினமாக இருந்ததுதான் காரணம்.
எட்டாம் வகுப்பில் எப்படி எங்கள் ஆசிரியர் திரு E .C. நாத் அவர்கள் சமூகவியல் பாடத்தை சுவைபட நடத்தி விரும்பச்செய்தாரோ,அது போல
திரு M.R.G அவர்கள் சிரிக்க சிரிக்க பேசி அந்த பாடத்தின் மேல் ஒரு விருப்பத்தை உண்டாக்கினார் என்பதே நிஜம்.
இந்தியாவை ஆங்கிலேயர் ஆண்டபோது, இருந்த கவர்னர் ஜெனெரல்கள் பெயர்களையும்,அவர்கள் கொண்டுவந்த சீர்திருத்தம் அல்லது சட்டங்களின் பெயர்களையும் நினைவில் வைத்துக்கொள்ள சிரமப்பட்டபோது,
திரு.M.R.G அவர்கள் அவைகளை நினைவில் வைக்க மிக
சுலபமான வழிகளை சொன்னது இன்னும் எனக்கு நினைவுக்கு வருகிறது.
அப்போது இருந்த சமஸ்தானங்களின்(Princely states)
குறுநில மன்னர்களுக்கு வாரிசு இல்லாமல் இருந்து
இறந்தால்,அவர்களுக்கு பின் அந்த சமஸ்தானங்களை
ஆள குடி மக்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து அவருக்கு
முடிசூட்டுவது வழக்கமாக இருந்தது.
இதை ஒழிப்பதற்காக, அப்போது இருந்த கவர்னர் ஜெனெரல் ஒருவர் அந்த சமஸ்தானங்களை கையகப்படுத்தி,அவைகளை ஆங்கிலேய ஆட்சியின் கீழ் கொண்டு வர ஏற்படுத்தியதுதான் Doctrine of lapse
எனப்படும் தத்து எடுப்பதை தடுக்கும் திட்டம்.
அந்த திட்டத்தை கொண்டுவந்தது யார் என்பதை நினைவில் இருத்த எங்கள் M.R.G அவர்கள் சொன்னது ....?
சனி, 25 செப்டம்பர், 2010
புதன், 8 செப்டம்பர், 2010
நினைவோட்டம் 28
விருத்தாச்சலத்தில் படித்த அந்த மூன்று ஆண்டுகளில் நான் கற்றுக்கொண்டவை அநேகம். அதற்கு காரணம் எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர்கள். இந்த நேரத்தில் அவர்களை நினைத்து வணங்குவதில் நான் பெருமைப்படுகிறேன்.
இத்தனை ஆண்டுகள் ஆகியும் அவர்கள் என் மனதில் இருக்கிறார்கள் என்றால், அதற்கு காரணம் அவர்களுடைய தன்னலமில்லா சேவையே
என்பது தான் உண்மை.
எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர்களில் மறக்க முடியாதவர்கள் பலர்.அவர்களைப்பற்றி எழுதுவது அவர்களுக்கு நான் தரும் மரியாதை என எண்ணுகிறேன்.
எனக்கு தமிழிலே ஆர்வம் வரக்காரணமாக இருந்த எங்கள் தமிழாசிரியர் புலவர் குப்புசாமி அய்யா அவர்கள்.ஒன்பதாம் வகுப்பிலிருந்து S.S.L.C வரை மூன்று ஆண்டுகளும் அவர் எங்களுக்கு தமிழ் ஆசிரியராக இருந்தவர்.
தூய வெள்ளை ஜிப்பாவுடனும் தோளில் துண்டுடனும் அவர் வகுப்பறையில் நுழையும்போதே எங்களுக்கு உற்சாகம் கரை புரண்டோடும். காரணம் அவர் பாடம் நடத்திய விதம். எவ்வளவு கடினமான பாடலானாலும் பொருள் புரியும் வண்ணம் சொற்களை பிரித்து அவர் சொல்லிக்கொடுத்தது இன்னும் நினைவில் இருக்கிறது.
தமிழில் இலக்கண பாடம்தான் கடினம் என்பார்கள். நான் முன்பே சொன்னது போல அப்போதெல்லாம் பொதுத்தமிழ், சிறப்புத்தமிழ் என இரு பாடப்பிரிவுகள் உண்டு.
அனைவரும் கட்டாயமாக பொதுத்தமிழைப்படித்தாக வேண்டும்.சிறப்புத்தமிழ் எடுக்காதவர்கள் வடமொழிப்பாடத்தை தேர்ந்தெடுப்பார்கள். இலக்கண பாடம் இருந்ததால் சிறப்புத்தமிழ்தான் கடினமாக இருக்கும்.
ஆனால் திரு குப்புசாமி அய்யா அவர்கள் இலக்கண பாடம் நடத்தினால் இன்றைக்கெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலிருக்கும்.
'நின்ற சீரின் ஈற்றசையும் வரும் சீரின் முதல் அசையும் ஒன்றுபட சேர்வதுதான் தளை' என வலது கையையும் இடது கையையும் இணைத்து அவர் தளைக்கு சொன்ன வரையறை (Definition)விளக்கம் இன்னும் என் நினைவில் இருந்து மறையவில்லை.
அவர் எங்களுக்கு வெண்பா எப்படி எழுதுவது என சொல்லிக்கொடுத்ததும்,
'தன்னிகரில்லாத் தமிழ்' என ஈற்றடி கொடுத்து எங்களுக்குவெண்பா போட்டி வைத்ததும் இன்னும் என் நெஞ்சில் பசுமையாய் இருக்கிறது.
(அவர் வைத்த போட்டியில் நாங்கள் அனைவரும் கலந்துகொண்டதும், எங்களில் சிலர் பின்னால் கவிஞர்கள் ஆனதும் தனிக்கதை.அந்த வகுப்புத்தோழர்களைப்பற்றி பின்பு எழுதுவேன்.)
எங்களை தமிழில் தவறு இல்லாமல், பேசவும் எழுதவும் வைத்தவர் திரு குப்புசாமி அய்யா அவர்கள் என்பதும்தமிழின் மேல் பற்றும் பிடிப்பும் எங்களுக்கு ஏற்பட, அவர் ஒரு காரணமாக இருந்தார்
என்பதும் மறுக்கமுடியாத,மறைக்கமுடியாத உண்மை.
இப்போது உள்ள இளைஞர்கள் தமிழில் சரியாக எழுத, பேச தடுமாறுவதைப் பார்க்கும்போது அவர் போன்ற தமிழ் ஆசிரியர்கள் இப்போது இருக்கிறார்களா எனத்தெரியவில்லை.
'கட்டிக்கொடுத்த சோறும், சொல்லிக்கொடுத்த பாடமும் கடைசிவரை வராது' என்பார்கள். ஆனால் குப்புசாமி அய்யா அவர்கள் சொல்லிக்கொடுத்த பாடம் இன்றுவரை எங்களிடம் இருக்கிறது என்பதை
பெருமையுடன் சொல்லுவேன்.
நினைவுகள் தொடரும்
வே.நடனசபாபதி
இத்தனை ஆண்டுகள் ஆகியும் அவர்கள் என் மனதில் இருக்கிறார்கள் என்றால், அதற்கு காரணம் அவர்களுடைய தன்னலமில்லா சேவையே
என்பது தான் உண்மை.
எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர்களில் மறக்க முடியாதவர்கள் பலர்.அவர்களைப்பற்றி எழுதுவது அவர்களுக்கு நான் தரும் மரியாதை என எண்ணுகிறேன்.
எனக்கு தமிழிலே ஆர்வம் வரக்காரணமாக இருந்த எங்கள் தமிழாசிரியர் புலவர் குப்புசாமி அய்யா அவர்கள்.ஒன்பதாம் வகுப்பிலிருந்து S.S.L.C வரை மூன்று ஆண்டுகளும் அவர் எங்களுக்கு தமிழ் ஆசிரியராக இருந்தவர்.
தூய வெள்ளை ஜிப்பாவுடனும் தோளில் துண்டுடனும் அவர் வகுப்பறையில் நுழையும்போதே எங்களுக்கு உற்சாகம் கரை புரண்டோடும். காரணம் அவர் பாடம் நடத்திய விதம். எவ்வளவு கடினமான பாடலானாலும் பொருள் புரியும் வண்ணம் சொற்களை பிரித்து அவர் சொல்லிக்கொடுத்தது இன்னும் நினைவில் இருக்கிறது.
தமிழில் இலக்கண பாடம்தான் கடினம் என்பார்கள். நான் முன்பே சொன்னது போல அப்போதெல்லாம் பொதுத்தமிழ், சிறப்புத்தமிழ் என இரு பாடப்பிரிவுகள் உண்டு.
அனைவரும் கட்டாயமாக பொதுத்தமிழைப்படித்தாக வேண்டும்.சிறப்புத்தமிழ் எடுக்காதவர்கள் வடமொழிப்பாடத்தை தேர்ந்தெடுப்பார்கள். இலக்கண பாடம் இருந்ததால் சிறப்புத்தமிழ்தான் கடினமாக இருக்கும்.
ஆனால் திரு குப்புசாமி அய்யா அவர்கள் இலக்கண பாடம் நடத்தினால் இன்றைக்கெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலிருக்கும்.
'நின்ற சீரின் ஈற்றசையும் வரும் சீரின் முதல் அசையும் ஒன்றுபட சேர்வதுதான் தளை' என வலது கையையும் இடது கையையும் இணைத்து அவர் தளைக்கு சொன்ன வரையறை (Definition)விளக்கம் இன்னும் என் நினைவில் இருந்து மறையவில்லை.
அவர் எங்களுக்கு வெண்பா எப்படி எழுதுவது என சொல்லிக்கொடுத்ததும்,
'தன்னிகரில்லாத் தமிழ்' என ஈற்றடி கொடுத்து எங்களுக்குவெண்பா போட்டி வைத்ததும் இன்னும் என் நெஞ்சில் பசுமையாய் இருக்கிறது.
(அவர் வைத்த போட்டியில் நாங்கள் அனைவரும் கலந்துகொண்டதும், எங்களில் சிலர் பின்னால் கவிஞர்கள் ஆனதும் தனிக்கதை.அந்த வகுப்புத்தோழர்களைப்பற்றி பின்பு எழுதுவேன்.)
எங்களை தமிழில் தவறு இல்லாமல், பேசவும் எழுதவும் வைத்தவர் திரு குப்புசாமி அய்யா அவர்கள் என்பதும்தமிழின் மேல் பற்றும் பிடிப்பும் எங்களுக்கு ஏற்பட, அவர் ஒரு காரணமாக இருந்தார்
என்பதும் மறுக்கமுடியாத,மறைக்கமுடியாத உண்மை.
இப்போது உள்ள இளைஞர்கள் தமிழில் சரியாக எழுத, பேச தடுமாறுவதைப் பார்க்கும்போது அவர் போன்ற தமிழ் ஆசிரியர்கள் இப்போது இருக்கிறார்களா எனத்தெரியவில்லை.
'கட்டிக்கொடுத்த சோறும், சொல்லிக்கொடுத்த பாடமும் கடைசிவரை வராது' என்பார்கள். ஆனால் குப்புசாமி அய்யா அவர்கள் சொல்லிக்கொடுத்த பாடம் இன்றுவரை எங்களிடம் இருக்கிறது என்பதை
பெருமையுடன் சொல்லுவேன்.
நினைவுகள் தொடரும்
வே.நடனசபாபதி
லேபிள்கள்:
நினைவுகள்
திங்கள், 30 ஆகஸ்ட், 2010
நினைவோட்டம் 27
ஒரு வழியாக எனது அண்ணனுக்கு விருத்தாசலம்
பள்ளியில் கணித ஆசிரியராக வேலை நியமன ஆணை வந்தது.
விருத்தாசலம் பள்ளியில் எனது அண்ணன் வேலைக்கு சேர்ந்த அன்று, சொல்லிவைத்தாற்போல் அவர் அண்ணாமலை பல்கலை கழகத்தில் B.Ed. படிக்கும்போது மாணவர் திட்டத்தின் கீழ் கலந்துகொண்டு எழுதிய 'குழந்தை தெய்வம்' என்ற கதை 'ஆனந்த விகடனில்' பிரசுரிக்கப்பட்டிருந்தது.
கதையோடு அவரது புகைப்படமும் வெளியாகி இருந்ததால் பள்ளிமுழுவதும் அதைப்பற்றியே பேச்சு. நானும் எனது வகுப்பு நண்பர்களிடையே அந்த கதையை எழுதியவர் எனது அண்ணன்தான் என பெருமையோடு சொல்லிக்கொண்டிருந்தேன்.
விருத்தாச்சலத்தில் தங்குவதற்கு அண்ணன் வீடு பார்க்க தொடங்கினார். அய்யனார் கோவில் தெருவில் கார்மாங்குடியைச்சேர்ந்த காண்ட்ராக்டர்
திரு சொக்கலிங்கம் பிள்ளை என்பவரது வீடு இருப்பதும் ,அவர் விருத்தாசலம் வரும்போது மட்டும் தங்குகிறார் என்பதை கேள்விப்பட்டு, அந்த வீட்டில் ஒரு அறையை மட்டும் வாடகைக்கு எடுத்தார்.
வாடகை மாதம் ரூபாய் பதினைந்து மட்டுமே.அந்த வீடு கிணறோடு கூடிய பெரிய வீடு.
சனி ஞாயிறு பள்ளி விடுமுறை என்பதால் வெள்ளி மாலை நான் மட்டும் எங்கள் ஊர் பையன்களுடன் ஊருக்கு சென்றுவிட்டு திங்கள் காலை வந்துவிடுவேன்.
நாங்கள் சாப்பிடுவதற்கு கடை வீதியில் இருந்த கோமள விலாஸ் ஹோட்டலில் கணக்கு தொடங்கினார்.
காலையில் எட்டு மணிக்கு ஹோட்டலுக்கு சென்று டிபன் சாப்பிட்டுவிட்டு வந்து பின்பு ஒன்பது மணிக்குமேல் பள்ளிக்கு கிளம்புவேன். மதியம் சாப்பாடு எனக்கும் அண்ணனுக்கும் சேர்த்து டிபன் கேரியரில் பள்ளிக்கு வந்துவிடும். இரவும் சாப்பாடு வீட்டுக்கு வந்துவிடும். சாப்பாடு எடுத்துவர ஒருவரை ஏற்பாடு செய்திருந்தார். அன்று (1957 ஜூலை மாதம் ) இருந்த உணவுப்பொருட்களின் விலைப்பட்டியல் இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது.
ஒரு இட்லி -ஒரு அணா (6 பைசா),
ஒரு செட் பூரி- இரண்டு அணா(12 பைசா),
ஒரு வடை-ஒரு அணா(6 பைசா),
ஒரு ஸ்வீட் - மூன்று அணா(18பைசா),
ஒரு காரம்- ஒரு அணா(6 பைசா),
ஒரு காபி- இரண்டு அணா(12 பைசா),
அதாவது SKC என அழைக்கப்பட்ட ஸ்வீட்,காரம்,காபி வெறும் ஆறு அணா(36 பைசா) மட்டுமே.
சாப்பாடு 50 பைசா தான்.
(சமீபத்தில் விருத்தாசலம் சென்று வந்தபோது, தற்சமயம்
ஹோட்டல்களில் ஒரு காபி 12 ரூபாய் எனக்கேள்விப்பட்டேன்.
1957ல் 12 பைசாவாக இருந்த ஒரு காபி இப்போது 12 ரூபாய் என்பதிலிருந்தே எந்த அளவுக்கு விலைவாசி உள்ளது என்று புரிந்துகொள்ளலாம்!)
நினைவுகள் தொடரும்
வே.நடனசபாபதி
பள்ளியில் கணித ஆசிரியராக வேலை நியமன ஆணை வந்தது.
விருத்தாசலம் பள்ளியில் எனது அண்ணன் வேலைக்கு சேர்ந்த அன்று, சொல்லிவைத்தாற்போல் அவர் அண்ணாமலை பல்கலை கழகத்தில் B.Ed. படிக்கும்போது மாணவர் திட்டத்தின் கீழ் கலந்துகொண்டு எழுதிய 'குழந்தை தெய்வம்' என்ற கதை 'ஆனந்த விகடனில்' பிரசுரிக்கப்பட்டிருந்தது.
கதையோடு அவரது புகைப்படமும் வெளியாகி இருந்ததால் பள்ளிமுழுவதும் அதைப்பற்றியே பேச்சு. நானும் எனது வகுப்பு நண்பர்களிடையே அந்த கதையை எழுதியவர் எனது அண்ணன்தான் என பெருமையோடு சொல்லிக்கொண்டிருந்தேன்.
விருத்தாச்சலத்தில் தங்குவதற்கு அண்ணன் வீடு பார்க்க தொடங்கினார். அய்யனார் கோவில் தெருவில் கார்மாங்குடியைச்சேர்ந்த காண்ட்ராக்டர்
திரு சொக்கலிங்கம் பிள்ளை என்பவரது வீடு இருப்பதும் ,அவர் விருத்தாசலம் வரும்போது மட்டும் தங்குகிறார் என்பதை கேள்விப்பட்டு, அந்த வீட்டில் ஒரு அறையை மட்டும் வாடகைக்கு எடுத்தார்.
வாடகை மாதம் ரூபாய் பதினைந்து மட்டுமே.அந்த வீடு கிணறோடு கூடிய பெரிய வீடு.
சனி ஞாயிறு பள்ளி விடுமுறை என்பதால் வெள்ளி மாலை நான் மட்டும் எங்கள் ஊர் பையன்களுடன் ஊருக்கு சென்றுவிட்டு திங்கள் காலை வந்துவிடுவேன்.
நாங்கள் சாப்பிடுவதற்கு கடை வீதியில் இருந்த கோமள விலாஸ் ஹோட்டலில் கணக்கு தொடங்கினார்.
காலையில் எட்டு மணிக்கு ஹோட்டலுக்கு சென்று டிபன் சாப்பிட்டுவிட்டு வந்து பின்பு ஒன்பது மணிக்குமேல் பள்ளிக்கு கிளம்புவேன். மதியம் சாப்பாடு எனக்கும் அண்ணனுக்கும் சேர்த்து டிபன் கேரியரில் பள்ளிக்கு வந்துவிடும். இரவும் சாப்பாடு வீட்டுக்கு வந்துவிடும். சாப்பாடு எடுத்துவர ஒருவரை ஏற்பாடு செய்திருந்தார். அன்று (1957 ஜூலை மாதம் ) இருந்த உணவுப்பொருட்களின் விலைப்பட்டியல் இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது.
ஒரு இட்லி -ஒரு அணா (6 பைசா),
ஒரு செட் பூரி- இரண்டு அணா(12 பைசா),
ஒரு வடை-ஒரு அணா(6 பைசா),
ஒரு ஸ்வீட் - மூன்று அணா(18பைசா),
ஒரு காரம்- ஒரு அணா(6 பைசா),
ஒரு காபி- இரண்டு அணா(12 பைசா),
அதாவது SKC என அழைக்கப்பட்ட ஸ்வீட்,காரம்,காபி வெறும் ஆறு அணா(36 பைசா) மட்டுமே.
சாப்பாடு 50 பைசா தான்.
(சமீபத்தில் விருத்தாசலம் சென்று வந்தபோது, தற்சமயம்
ஹோட்டல்களில் ஒரு காபி 12 ரூபாய் எனக்கேள்விப்பட்டேன்.
1957ல் 12 பைசாவாக இருந்த ஒரு காபி இப்போது 12 ரூபாய் என்பதிலிருந்தே எந்த அளவுக்கு விலைவாசி உள்ளது என்று புரிந்துகொள்ளலாம்!)
நினைவுகள் தொடரும்
வே.நடனசபாபதி
லேபிள்கள்:
நினைவுகள்
செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010
நினைவோட்டம் 26
நான் விருத்தாசலத்தில் மூன்று ஆண்டுகள் அதாவது 1957 ஜூன் முதல் 1960 பிப்ரவரி வரை படித்தேன்.
(அப்போதெல்லாம் S.S.L.C எனப்படும் பள்ளி இறுதி ஆண்டு படிப்புக்கான தேர்வு பிப்ரவரிலேயே முடிந்துவிடும்)
நான் படித்தபோது விருத்தாசலம் எப்படி இருந்ததோ அப்படியேதான் இன்னும் இருக்கிறது. விருத்தாசலத்தை சுற்றி பல குடியிருப்புகள் புதியதாக ஏற்பட்டிருந்தாலும் கடைவீதி அப்படியே தான் இருக்கிறது.
என்ன காரணத்தாலோ விருத்தாசலம் மாற்றங்களை விரும்பவில்லை போலும்!
இந்த இடத்தில் நான் விருத்தாசலத்தை பற்றி சொல்லியே ஆகவேண்டும். திருநாவுக்கரசர்,திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய சமயகுரவர்களால் பாடப்பெற்ற, இந்த ஊரின் உண்மையான பெயர் பழமலை ஆகும்.
திருமுதுகுன்றம் என்றும் அழகு தமிழில் பெயர் உண்டு.பிற்காலத்தில் வடமொழியின் ஆதிக்கத்தால், இது விருத்தாசலம் ஆனது. (விருத்தம் என்றால் பழையது, அசலம் என்றால் மலை.) விருத்தகிரி எனவும் அழைக்கப்பட்டது.
இந்த ஊர் கோவிலுக்கு மற்றுமோர் சிறப்பு உண்டு. இங்கு எல்லாமே ஐந்துதான். கோபுரம் ஐந்து, கொடிமரம் ஐந்து, மூர்த்திகள் ஐந்து, பிரகாரம் ஐந்து, தேர்கள் ஐந்து, மண்டபங்கள் ஐந்து, வழிபாடு ஐந்து, இறைவனின் பெயர் ஐந்து, ஊரின் பெயரும் ஐந்து!
இந்த ஊர் கோவில் கட்டப்படும்போது வேலை செய்தோருக்கு கூலியாக, இந்த கோவிலின் தல விருட்சமான வன்னி மரத்தின் இலைகளைக்கொடுத்தார்கள் என்றும், அதை வாங்கிச்செல்லும் தொழிலாளிகள் அவற்றை தலையணைக்கு கீழே இரவு வைத்துவிட்டு காலையில் எடுக்கும்போது அவை பொற் காசுகளாக மாறியிருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
வேலை ஒழுங்காக செய்யாதோருக்கு, அவர்கள் வேலை செய்த அளவுக்குத்தான் பொற் காசுகள் மாறி இருக்கும் என்றும் மீதமுள்ளவை வன்னி இலையாகவே இருக்கும் என சொல்லக்கேட்டிருக்கிறேன்.
நான் கூட வேடிக்கையாக சொல்வதுண்டு. இப்போதும் அந்த நடை முறை பின்பற்றப்பட்டால், அந்த மாதிரி இலைகள் காசுகளாக மாறினால், நம்மில் பல பேர் வெறும் இலையோடுதான் இருக்கவேண்டியிருக்கும் என்று.
இந்த ஊரின் நடுவே ஓடும்(?) மணிமுத்தா நதி காசியில் ஓடும் கங்கையை விட புண்ணியமானது என்றும் சொல்வார்கள். ஆனால் இன்றோ மழைக்காலங்களை தவிர மற்ற நாட்களில் தண்ணீரே இருப்பதில்லை.
இந்த ஊரில் உள்ள மணிலா மார்கெட் மிகவும் பழமையானதும், முக்கியமானதும் கூட.
இவ்வளவு சிறப்புகளைக்கொண்ட இந்த ஊர் பலபேருக்கு தெரியாமல் இருந்து, 2006 ல் நடிகர் விஜயகாந்த் தேர்தலில் நின்று வெற்றி பெற்ற பிறகுதான் தெரிய வந்தது என்பது மறுக்கமுடியாத உண்மை.
நினைவுகள் தொடரும்
வே.நடனசபாபதி
(அப்போதெல்லாம் S.S.L.C எனப்படும் பள்ளி இறுதி ஆண்டு படிப்புக்கான தேர்வு பிப்ரவரிலேயே முடிந்துவிடும்)
நான் படித்தபோது விருத்தாசலம் எப்படி இருந்ததோ அப்படியேதான் இன்னும் இருக்கிறது. விருத்தாசலத்தை சுற்றி பல குடியிருப்புகள் புதியதாக ஏற்பட்டிருந்தாலும் கடைவீதி அப்படியே தான் இருக்கிறது.
என்ன காரணத்தாலோ விருத்தாசலம் மாற்றங்களை விரும்பவில்லை போலும்!
இந்த இடத்தில் நான் விருத்தாசலத்தை பற்றி சொல்லியே ஆகவேண்டும். திருநாவுக்கரசர்,திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய சமயகுரவர்களால் பாடப்பெற்ற, இந்த ஊரின் உண்மையான பெயர் பழமலை ஆகும்.
திருமுதுகுன்றம் என்றும் அழகு தமிழில் பெயர் உண்டு.பிற்காலத்தில் வடமொழியின் ஆதிக்கத்தால், இது விருத்தாசலம் ஆனது. (விருத்தம் என்றால் பழையது, அசலம் என்றால் மலை.) விருத்தகிரி எனவும் அழைக்கப்பட்டது.
இந்த ஊர் கோவிலுக்கு மற்றுமோர் சிறப்பு உண்டு. இங்கு எல்லாமே ஐந்துதான். கோபுரம் ஐந்து, கொடிமரம் ஐந்து, மூர்த்திகள் ஐந்து, பிரகாரம் ஐந்து, தேர்கள் ஐந்து, மண்டபங்கள் ஐந்து, வழிபாடு ஐந்து, இறைவனின் பெயர் ஐந்து, ஊரின் பெயரும் ஐந்து!
இந்த ஊர் கோவில் கட்டப்படும்போது வேலை செய்தோருக்கு கூலியாக, இந்த கோவிலின் தல விருட்சமான வன்னி மரத்தின் இலைகளைக்கொடுத்தார்கள் என்றும், அதை வாங்கிச்செல்லும் தொழிலாளிகள் அவற்றை தலையணைக்கு கீழே இரவு வைத்துவிட்டு காலையில் எடுக்கும்போது அவை பொற் காசுகளாக மாறியிருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
வேலை ஒழுங்காக செய்யாதோருக்கு, அவர்கள் வேலை செய்த அளவுக்குத்தான் பொற் காசுகள் மாறி இருக்கும் என்றும் மீதமுள்ளவை வன்னி இலையாகவே இருக்கும் என சொல்லக்கேட்டிருக்கிறேன்.
நான் கூட வேடிக்கையாக சொல்வதுண்டு. இப்போதும் அந்த நடை முறை பின்பற்றப்பட்டால், அந்த மாதிரி இலைகள் காசுகளாக மாறினால், நம்மில் பல பேர் வெறும் இலையோடுதான் இருக்கவேண்டியிருக்கும் என்று.
இந்த ஊரின் நடுவே ஓடும்(?) மணிமுத்தா நதி காசியில் ஓடும் கங்கையை விட புண்ணியமானது என்றும் சொல்வார்கள். ஆனால் இன்றோ மழைக்காலங்களை தவிர மற்ற நாட்களில் தண்ணீரே இருப்பதில்லை.
இந்த ஊரில் உள்ள மணிலா மார்கெட் மிகவும் பழமையானதும், முக்கியமானதும் கூட.
இவ்வளவு சிறப்புகளைக்கொண்ட இந்த ஊர் பலபேருக்கு தெரியாமல் இருந்து, 2006 ல் நடிகர் விஜயகாந்த் தேர்தலில் நின்று வெற்றி பெற்ற பிறகுதான் தெரிய வந்தது என்பது மறுக்கமுடியாத உண்மை.
நினைவுகள் தொடரும்
வே.நடனசபாபதி
லேபிள்கள்:
நினைவுகள்
வெள்ளி, 23 ஜூலை, 2010
எனக்குப்பிடித்த பாடல்கள் 7
சாதிகள் எத்தனை சாதியடி!
ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பதுகளில் ஒவ்வொருவருடைய பெயருக்கு பின்னால் இருந்த சாதி அடைமொழி, அறுபதுகளில் காணாமல் போனது உண்மை.அதுவும்சிற்றூர்களில் இருந்து நகரத்திற்கு மக்கள் இடம் பெயர்ந்தபோது சாதிகள் காணமல் போயின.
இன்னும் சொல்லப்போனால் பெயருக்கு பின்னால் சாதியைப்போடுவதை பெருமையாய் கருதிய இந்த சமூகம், இன்ன சாதி என சொல்லிக்கொள்ளவே தயங்கியது அல்லது விரும்பவில்லை எனலாம்.
எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. நான் ஐந்தாவது முடித்து ஆறாம் வகுப்புக்கு அரியலூர் செல்ல பள்ளி மாற்று சான்றிதழ் கேட்டபோது எனது பெயருக்கு பின்னால் எனது சாதியை எழுதித்தான் கொடுத்தார்கள்.
காணாமல் போயிருந்த சாதிப்பற்று(வெறி) திரும்பவும் தலை தூக்கியிருப்பது கவலைக்கு உரியதுதான்.
இன்றைக்கு எங்குபார்த்தாலும் திடீரென புதிய புதிய சாதிச்சங்கங்கள் தோன்ற தொடக்கியுள்ளன.
இதுவரை இல்லாத இவைகள் திடீரென முளைக்க காரணம்? இதற்கு முன்பு சாதிகளே இல்லையா என யோசித்ததில், ஆட்சியாளர்களை கவனத்தை ஈர்த்து, தங்களுக்கும் 'வாக்கு வங்கி' உள்ளது என்ற தோற்றத்தை உண்டாகி அரசியல் கட்சிகளிடம் பேரம் பேசி அதன் மூலம் பலன் பெற சிலர் முயற்சிக்கிறார்களோ என நினைக்கிறேன்.
இந்த சுயநலவாதிகளுக்கு, அவர்கள் சாதி மக்களை முன்னேற்றும் எண்ணம்இல்லை என்பதே உண்மை. தங்கள் சுய நலத்திற்காக சாதி என்ற போர்வையை உபயோகிக்கிறார்களோ என்றே எண்ணத்தோன்றுகிறது.
அரசியலில் நுழைந்த சாதி, இன்று திரைத்துறையில், அலுவலகத்தில், கல்லூரியில், பள்ளியில் என எல்லா இடங்களிலும் புகுந்து நம்மை பிரித்து வைக்கிறது என்றே நினைக்கிறேன்.
இல்லாவிட்டால் நாம் என்றாவது, நடிகர் திலகம் சிவாஜி கணேசன், முத்துராமன், தங்கவேலு, வி.ஆர்.இராமசாமி பாலையா போன்ற நடிகர்கள் என்ன சாதி என்று நினைத்து பார்த்திருக்கிறோமா? இன்றோ ஒவ்வொரு நடிகரும் தாங்கள் இன்ன சாதி என்பதை தங்கள் சாதிச்சங்கங்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு வெளிப்படுத்த தொடங்கியுள்ளார்கள். இது எங்கு போய் முடியும் எனத்தெரியவில்லை.
இந்த சாதி வெளிப்பாடு அவ்வை பாட்டி காலத்திலும் இருந்திருக்கும் போலிருக்கிறது. அதனால்தான் அதை நேரடியாக சாடாமல், இரண்டே சாதிதான் இருப்பதாக அடித்து சொல்கிறார் 'நல்வழி' யில்.
சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தார்
பட்டாங்கில் உள்ள படி
என்னைப்பொறுத்தவரை இவ்வுலகில் 'உழைக்கும் சாதி' உழைக்கா சாதி' என இரண்டு வகை சாதிகள் நான் இருப்பதாகத்தான் கருதுகிறேன்.
'திருடனாய்ப்பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது 'என கவிஞர் பட்டுகோட்டையார் சொன்னதுபோல, மக்களாக பார்த்து சாதியை விட்டால் ஒழிய இந்த வியாதியை(சாதியை) தடுக்கமுடியாது.
ஆனால் இது நடக்கும் என்பது சந்தேகமே. இருந்தாலும் நம்பிக்கையோடு காத்திருப்போம்!!!
ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பதுகளில் ஒவ்வொருவருடைய பெயருக்கு பின்னால் இருந்த சாதி அடைமொழி, அறுபதுகளில் காணாமல் போனது உண்மை.அதுவும்சிற்றூர்களில் இருந்து நகரத்திற்கு மக்கள் இடம் பெயர்ந்தபோது சாதிகள் காணமல் போயின.
இன்னும் சொல்லப்போனால் பெயருக்கு பின்னால் சாதியைப்போடுவதை பெருமையாய் கருதிய இந்த சமூகம், இன்ன சாதி என சொல்லிக்கொள்ளவே தயங்கியது அல்லது விரும்பவில்லை எனலாம்.
எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. நான் ஐந்தாவது முடித்து ஆறாம் வகுப்புக்கு அரியலூர் செல்ல பள்ளி மாற்று சான்றிதழ் கேட்டபோது எனது பெயருக்கு பின்னால் எனது சாதியை எழுதித்தான் கொடுத்தார்கள்.
காணாமல் போயிருந்த சாதிப்பற்று(வெறி) திரும்பவும் தலை தூக்கியிருப்பது கவலைக்கு உரியதுதான்.
இன்றைக்கு எங்குபார்த்தாலும் திடீரென புதிய புதிய சாதிச்சங்கங்கள் தோன்ற தொடக்கியுள்ளன.
இதுவரை இல்லாத இவைகள் திடீரென முளைக்க காரணம்? இதற்கு முன்பு சாதிகளே இல்லையா என யோசித்ததில், ஆட்சியாளர்களை கவனத்தை ஈர்த்து, தங்களுக்கும் 'வாக்கு வங்கி' உள்ளது என்ற தோற்றத்தை உண்டாகி அரசியல் கட்சிகளிடம் பேரம் பேசி அதன் மூலம் பலன் பெற சிலர் முயற்சிக்கிறார்களோ என நினைக்கிறேன்.
இந்த சுயநலவாதிகளுக்கு, அவர்கள் சாதி மக்களை முன்னேற்றும் எண்ணம்இல்லை என்பதே உண்மை. தங்கள் சுய நலத்திற்காக சாதி என்ற போர்வையை உபயோகிக்கிறார்களோ என்றே எண்ணத்தோன்றுகிறது.
அரசியலில் நுழைந்த சாதி, இன்று திரைத்துறையில், அலுவலகத்தில், கல்லூரியில், பள்ளியில் என எல்லா இடங்களிலும் புகுந்து நம்மை பிரித்து வைக்கிறது என்றே நினைக்கிறேன்.
இல்லாவிட்டால் நாம் என்றாவது, நடிகர் திலகம் சிவாஜி கணேசன், முத்துராமன், தங்கவேலு, வி.ஆர்.இராமசாமி பாலையா போன்ற நடிகர்கள் என்ன சாதி என்று நினைத்து பார்த்திருக்கிறோமா? இன்றோ ஒவ்வொரு நடிகரும் தாங்கள் இன்ன சாதி என்பதை தங்கள் சாதிச்சங்கங்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு வெளிப்படுத்த தொடங்கியுள்ளார்கள். இது எங்கு போய் முடியும் எனத்தெரியவில்லை.
இந்த சாதி வெளிப்பாடு அவ்வை பாட்டி காலத்திலும் இருந்திருக்கும் போலிருக்கிறது. அதனால்தான் அதை நேரடியாக சாடாமல், இரண்டே சாதிதான் இருப்பதாக அடித்து சொல்கிறார் 'நல்வழி' யில்.
சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தார்
பட்டாங்கில் உள்ள படி
என்னைப்பொறுத்தவரை இவ்வுலகில் 'உழைக்கும் சாதி' உழைக்கா சாதி' என இரண்டு வகை சாதிகள் நான் இருப்பதாகத்தான் கருதுகிறேன்.
'திருடனாய்ப்பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது 'என கவிஞர் பட்டுகோட்டையார் சொன்னதுபோல, மக்களாக பார்த்து சாதியை விட்டால் ஒழிய இந்த வியாதியை(சாதியை) தடுக்கமுடியாது.
ஆனால் இது நடக்கும் என்பது சந்தேகமே. இருந்தாலும் நம்பிக்கையோடு காத்திருப்போம்!!!
லேபிள்கள்:
கவிதைநயம்
வியாழன், 15 ஜூலை, 2010
நினைவோட்டம் 25
இன்றைக்கு நாம் ஒரு கிலோ மீட்டர் என்றாலும் கூட நடந்து செல்வதில்லை. சொந்த வாகனத்திலோ அல்லது ஆட்டோ (அ) ஷேர் ஆட்டோவிலோ பயணிக்கிறோம்.
ஆனால் ஐம்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் பேரூந்து வசதி இல்லாத காலகட்டத்தில், எங்கள் ஊரிலிருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் இருந்த விருத்தாச்சலத்திற்கு நடந்து செல்வதைத்தவிர வேறு வழியில்லை.
நாங்கள் அனைவரும் காலை ஏழுமணிக்குள்சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு மதிய உணவுக்கு தயிர் சாதத்தை (அ) இட்லியை ஒரு சிறிய தூக்கில் எடுத்துக்கொண்டு கிளம்புவோம்.
பேசிக்கொண்டே கூட்டமாக சென்றதால் பயண அலுப்போ, களைப்போ தெரியாது.போகிற வழியில் எங்கள் ஊரிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குறுக்கு ரோடு என அழைக்கப்படும் கருவேப்பிலங் குறிச்சி என்ற ஊரைத்தாண்டியதும் சுமார் இரு கிலோமீட்டர் தூரத்திற்கு இரு பக்கமும் காடு இருக்கும்.
காட்டில் ஓடும் ஓடைக்காக இரண்டு இடங்களில் சறுக்கல் எனும் தரைப்பாலமும்,ஒரு இடத்தில் மதகும் இருக்கும். அந்த சறுக்கல்கள் பெரிய சறுக்கல் என்றும் சின்ன சறுக்கல் என்றும் அழைக்கப்பட்டன.(இப்போது அவைகள் எல்லாம் காணாமல் போய் புதிய பாலங்கள் வந்துவிட்டன) மழைக்காலங்களில் காட்டு ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது ஓரிரு நாட்கள் பள்ளி செல்ல முடியாது. காரணம் அந்த சறுக்கல்களில், அதுவும் சின்ன சறுக்கலில் தண்ணீரின் ஓட்டமும், இழுப்பும் அதிகமாக இருக்கும்.
காடு உள்ள பாதையின் வழியில், சில இடங்களில் விளாமரங்கள் இருக்கும். நடந்துசெல்லும்போது அவற்றில் பழுத்துதொங்கும் விளாம்பழங்களை கல்லால் அடித்து, பறித்து சாப்பிட்டுக்கொண்டே செல்வோம். (இன்றைய இளைஞர்களில் எவ்வளவு பேர் விளாம் பழங்களைப்பற்றி கேள்விப்பட்டு இருப்பார்கள் எனத்தெரியவில்லை.)
காட்டைத்தாண்டியதும் விருத்தாசலத்தின் எல்லைக்கோவிலான வேடப்பர் கோவில் வரும். பிறகு இருக்கும் சித்தலூர் என்ற ஊரையும் தாண்டி விருத்தாசலம் அருகே ஓடும் மணிமுத்தாறு ஆற்றைக்கடந்து பள்ளியை அடையும்போது சரியாக மணி ஒன்பது ஆகிவிடும்.
வகுப்புக்கு சென்று பைகளை வைத்துவிட்டு காலை வழிபாட்டு நிகழ்ச்சிக்கு செல்வோம். மாலை வகுப்புக்கள் முடிந்து நாலே கால் மணிக்கு பள்ளிவிட்டதும்,அனைவரும் கிளம்பி வீட்டுக்கு வரும்போது மாலை ஆறரை மணிக்குமேல் ஆகிவிடும்.
வீட்டுக்கு வந்து கைகால் கழுவி ஏதாவது சாப்பிட்டு படிக்க உட்கார்ந்தால் தூக்கம் கண்ணை சுழற்றும். இரவு உணவை முடித்துவிட்டு படுக்கத்தான் தோன்றும்.
ஆரம்பத்தில் இவ்வாறு சென்று வருவது கடினமாக இருந்தாலும், ஓரிரு மாதங்களில் விருத்தாச்சலத்திலேயே தங்க போவதால்,நண்பர்களோடு சென்று வருவது சில நாட்கள் தானே என்ற எண்ணம் அந்த கஷ்டத்தை மறக்கச்செய்தது.
நினைவுகள் தொடரும்
வே.நடனசபாபதி
ஆனால் ஐம்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் பேரூந்து வசதி இல்லாத காலகட்டத்தில், எங்கள் ஊரிலிருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் இருந்த விருத்தாச்சலத்திற்கு நடந்து செல்வதைத்தவிர வேறு வழியில்லை.
நாங்கள் அனைவரும் காலை ஏழுமணிக்குள்சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு மதிய உணவுக்கு தயிர் சாதத்தை (அ) இட்லியை ஒரு சிறிய தூக்கில் எடுத்துக்கொண்டு கிளம்புவோம்.
பேசிக்கொண்டே கூட்டமாக சென்றதால் பயண அலுப்போ, களைப்போ தெரியாது.போகிற வழியில் எங்கள் ஊரிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குறுக்கு ரோடு என அழைக்கப்படும் கருவேப்பிலங் குறிச்சி என்ற ஊரைத்தாண்டியதும் சுமார் இரு கிலோமீட்டர் தூரத்திற்கு இரு பக்கமும் காடு இருக்கும்.
காட்டில் ஓடும் ஓடைக்காக இரண்டு இடங்களில் சறுக்கல் எனும் தரைப்பாலமும்,ஒரு இடத்தில் மதகும் இருக்கும். அந்த சறுக்கல்கள் பெரிய சறுக்கல் என்றும் சின்ன சறுக்கல் என்றும் அழைக்கப்பட்டன.(இப்போது அவைகள் எல்லாம் காணாமல் போய் புதிய பாலங்கள் வந்துவிட்டன) மழைக்காலங்களில் காட்டு ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது ஓரிரு நாட்கள் பள்ளி செல்ல முடியாது. காரணம் அந்த சறுக்கல்களில், அதுவும் சின்ன சறுக்கலில் தண்ணீரின் ஓட்டமும், இழுப்பும் அதிகமாக இருக்கும்.
காடு உள்ள பாதையின் வழியில், சில இடங்களில் விளாமரங்கள் இருக்கும். நடந்துசெல்லும்போது அவற்றில் பழுத்துதொங்கும் விளாம்பழங்களை கல்லால் அடித்து, பறித்து சாப்பிட்டுக்கொண்டே செல்வோம். (இன்றைய இளைஞர்களில் எவ்வளவு பேர் விளாம் பழங்களைப்பற்றி கேள்விப்பட்டு இருப்பார்கள் எனத்தெரியவில்லை.)
காட்டைத்தாண்டியதும் விருத்தாசலத்தின் எல்லைக்கோவிலான வேடப்பர் கோவில் வரும். பிறகு இருக்கும் சித்தலூர் என்ற ஊரையும் தாண்டி விருத்தாசலம் அருகே ஓடும் மணிமுத்தாறு ஆற்றைக்கடந்து பள்ளியை அடையும்போது சரியாக மணி ஒன்பது ஆகிவிடும்.
வகுப்புக்கு சென்று பைகளை வைத்துவிட்டு காலை வழிபாட்டு நிகழ்ச்சிக்கு செல்வோம். மாலை வகுப்புக்கள் முடிந்து நாலே கால் மணிக்கு பள்ளிவிட்டதும்,அனைவரும் கிளம்பி வீட்டுக்கு வரும்போது மாலை ஆறரை மணிக்குமேல் ஆகிவிடும்.
வீட்டுக்கு வந்து கைகால் கழுவி ஏதாவது சாப்பிட்டு படிக்க உட்கார்ந்தால் தூக்கம் கண்ணை சுழற்றும். இரவு உணவை முடித்துவிட்டு படுக்கத்தான் தோன்றும்.
ஆரம்பத்தில் இவ்வாறு சென்று வருவது கடினமாக இருந்தாலும், ஓரிரு மாதங்களில் விருத்தாச்சலத்திலேயே தங்க போவதால்,நண்பர்களோடு சென்று வருவது சில நாட்கள் தானே என்ற எண்ணம் அந்த கஷ்டத்தை மறக்கச்செய்தது.
நினைவுகள் தொடரும்
வே.நடனசபாபதி
லேபிள்கள்:
நினைவுகள்
புதன், 30 ஜூன், 2010
நினைவோட்டம் 24
விடுமுறை முடிந்து தேர்வு முடிவுகள் வந்தபோது எதிர்பார்த்தது போலவே, நான் மூன்றாம் படிவத்தில்(எட்டாம் வகுப்பில் ) தேர்ச்சி பெற்றிருந்தேன்.
முன்பே எழுதியிருந்தபடி, எனது அண்ணன் திரு சபாநாயகம் அவர்கள் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பட்டப்படிப்பு (B.Ed.,) முடித்திருந்ததால், அவருக்கு விருத்தாசலம் பள்ளியில் வேலை கிடைக்கும் என எதிர்பார்த்து அப்பா என்னை விருத்தாசலம் பள்ளியில் சேர்க்க முடிவு செய்தார்கள்.
பள்ளி திறந்தவுடன் நான் பெண்ணாடம் சென்று ,பள்ளியிலிருந்து மாற்று சான்றிதழ் (T.C ) பெற்று,விருத்தாசலம் கழக உயர் நிலை பள்ளிக்கு வந்தபோது, எனது அண்ணன் அங்கே காத்திருந்து என்னை அங்கே சேர்த்தார்.
ஆனால் எனது அண்ணனுக்கு முதலில் விருத்தாசலம் பள்ளியில் கணித ஆசிரியராக வேலை தராமல்,பண்ருட்டியில் இருந்த உயர்நிலைப்பள்ளியில் போட்டிருந்தார்கள். அதை மாற்றி விருத்தாசலம் பள்ளிக்கு ஆணை பெற்று வர தாமதமானதால், அவர் வந்து வேலையில் சேர்ந்து ,விருத்தாச்சலத்தில் வீடு வாடகைக்கு எடுக்கும்வரை
நான் எங்கள் ஊரான தெ.வ.புத்தூரிலிருந்து தினம் பள்ளிக்கு சென்றுவருவது என முடிவு செய்யப்பட்டது.
எங்கள் ஊரிலிருந்து விருத்தாசலம் செல்ல பேரூந்து வசதி அப்போது இல்லாததால் தினம் பள்ளிக்கு எட்டு கிலோ மீட்டர் நடந்துதான் செல்லவேண்டும். என்னால் தினம் பதினாறு கிலோமீட்டர் நடக்கமுடியுமா என அம்மா கவலைப்பட்டார்கள். ஆனால் எங்கள் ஊரிலிருந்து ஆறேழு பையன்கள் தினம் சென்று வந்ததால் நான் அவர்களுடன் பள்ளிக்கு சென்று வருவதாக கூறி போய் வந்தேன்.
முதன் முதல் பள்ளிக்கு சென்று வந்து அன்று, செருப்பு போடாமல் நடந்து சென்றதால்,பாதங்கள் வீங்கி கஷ்டப்பட்டேன்.
ஆனால் ஒருவாரத்திற்குள் நடந்து சென்று வருவது பழகிவிட்டதால் அதுவே
ஒரு சுகமான அனுபவமாக இருந்தது.
நினைவுகள் தொடரும்
வே.நடனசபாபதி
முன்பே எழுதியிருந்தபடி, எனது அண்ணன் திரு சபாநாயகம் அவர்கள் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பட்டப்படிப்பு (B.Ed.,) முடித்திருந்ததால், அவருக்கு விருத்தாசலம் பள்ளியில் வேலை கிடைக்கும் என எதிர்பார்த்து அப்பா என்னை விருத்தாசலம் பள்ளியில் சேர்க்க முடிவு செய்தார்கள்.
பள்ளி திறந்தவுடன் நான் பெண்ணாடம் சென்று ,பள்ளியிலிருந்து மாற்று சான்றிதழ் (T.C ) பெற்று,விருத்தாசலம் கழக உயர் நிலை பள்ளிக்கு வந்தபோது, எனது அண்ணன் அங்கே காத்திருந்து என்னை அங்கே சேர்த்தார்.
ஆனால் எனது அண்ணனுக்கு முதலில் விருத்தாசலம் பள்ளியில் கணித ஆசிரியராக வேலை தராமல்,பண்ருட்டியில் இருந்த உயர்நிலைப்பள்ளியில் போட்டிருந்தார்கள். அதை மாற்றி விருத்தாசலம் பள்ளிக்கு ஆணை பெற்று வர தாமதமானதால், அவர் வந்து வேலையில் சேர்ந்து ,விருத்தாச்சலத்தில் வீடு வாடகைக்கு எடுக்கும்வரை
நான் எங்கள் ஊரான தெ.வ.புத்தூரிலிருந்து தினம் பள்ளிக்கு சென்றுவருவது என முடிவு செய்யப்பட்டது.
எங்கள் ஊரிலிருந்து விருத்தாசலம் செல்ல பேரூந்து வசதி அப்போது இல்லாததால் தினம் பள்ளிக்கு எட்டு கிலோ மீட்டர் நடந்துதான் செல்லவேண்டும். என்னால் தினம் பதினாறு கிலோமீட்டர் நடக்கமுடியுமா என அம்மா கவலைப்பட்டார்கள். ஆனால் எங்கள் ஊரிலிருந்து ஆறேழு பையன்கள் தினம் சென்று வந்ததால் நான் அவர்களுடன் பள்ளிக்கு சென்று வருவதாக கூறி போய் வந்தேன்.
முதன் முதல் பள்ளிக்கு சென்று வந்து அன்று, செருப்பு போடாமல் நடந்து சென்றதால்,பாதங்கள் வீங்கி கஷ்டப்பட்டேன்.
ஆனால் ஒருவாரத்திற்குள் நடந்து சென்று வருவது பழகிவிட்டதால் அதுவே
ஒரு சுகமான அனுபவமாக இருந்தது.
நினைவுகள் தொடரும்
வே.நடனசபாபதி
லேபிள்கள்:
நினைவுகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)