முறைப்படி வரைய கற்றபோது திரு மாயா அவர்கள்,
நம் வீட்டில் உள்ள சில பொருட்களைப்பார்த்து
வரைந்து அனுப்ப சொல்லுவார். அப்படி
16 -05-1977 அன்று வரைந்த படம் கீழே.

கீழே உள்ள படத்தை அவர்கள் அனுப்பிய
படத்தைப்பார்த்து 31 -05-1977 அன்று 'Indian Ink'
மூலம் புள்ளிகள் வைத்தேவரைந்தேன்.
என்னைப்பொறுத்தவரை நன்றாக வரைந்ததாக
எண்ணியபோது திரு மாயா அவர்கள் அதில்
உள்ள குறையை சுட்டிக்காண்பித்து இருந்தார்.

கீழே உள்ள படம்,'தினமணி கதிர்'பத்திரிக்கையில்
வந்த படத்தைப்பார்த்து 01 -09-1977 அன்று
வரைந்தது.

நான் வரைந்த ஓவியங்களில்,அதிக நேரம்
எடுத்துக்கொண்டது கீழே உள்ள படத்திற்குத்தான்.
சுமார் நான்கு மணி நேரம் கஷ்டப்பட்டு
இதை வரைந்தேன். வரைந்த பின் பார்த்ததும்,
நான் பட்ட கஷ்டம் வீண் போகவில்லை
என நினைத்தேன்.
வரைந்த நாள்: 16 -10-1977

வேறு சில படங்கள் அடுத்த பதிவுகளில்.

















.jpg)
.jpg)


