வெள்ளி, 31 அக்டோபர், 2014

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 17



1971 ஆம் ஆண்டு மே திங்கள் 21 ஆம் நாள் வெள்ளிக்கிழமை 
காலை கண் விழித்தபோது புது தில்லியில் உள்ளோரும் 
ஏன் இந்தியாவில் உள்ளோர் எவருமே அன்று நடக்க இருக்கும் 
ஒரு நிகழ்வு நாட்டையே உலுக்கப் போகிறது என 
அறிந்திருக்கவில்லை. அந்த நிகழ்வில் தானும் ஒரு பகுதியாக
இருக்கப் போகிறோம் என்று பாரத ஸ்டேட் வங்கியின்
தலைமை காசாளர் ஒருவரும் எண்ணியிருக்கமாட்டார்!

செவ்வாய், 21 அக்டோபர், 2014

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 16




ரூபாய் இரண்டு இலட்சத்தை யாரையும் கலந்து ஆலோசிக்காமல் தொலைபேசியில் வங்கித் தலைவர் குரலில் பேசியவர் 
சொன்னதின் பேரில் விதிகளுக்கு புறம்பாக பணத்தை கொடுத்த 
அலுவலர் தான் ஏமாந்துவிட்டோம் எனத் தெரிந்ததும் 
என்ன செய்வதென்று புரியாமல் விழித்திருக்கிறார்.

செவ்வாய், 14 அக்டோபர், 2014

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 15



தொலைபேசியில் பேசியவர்  நான் தான்  வங்கியின் தலைவர்  

பேசுகிறேன். என்றதும் முதலில் பதற்றம் அடைந்த அந்த அலுவலர் 

பின்னர் மிகவும் பணிவாக சார்.உதவி மேலாளர் பேசுகிறேன்.மேலாளர் 

இல்லை சார். என்ன செய்யவேண்டும் என்று சொல்லுங்கள் சார்?’ என்று 

கன்னடத்தில் பேசத் தொடங்கிவிட்டார். 

புதன், 8 அக்டோபர், 2014

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 14




அந்த ஏமாற்றுப் பேர்வழியிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு வங்கி

கிளைக்குத் திரும்பியவுடன் அந்த கிளை மேலாளர் செய்த முதல் 

வேலை தலைமையகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டதுதான்.

வெள்ளி, 26 செப்டம்பர், 2014

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 13



சேலம் மத்திய சிறையிலிருந்த அந்த ஏமாற்றுப்பேர்வழியை நீதிமன்றம் 

உள்ள ஊருக்கு செல்ல பேருந்து நிலையம் அழைத்து சென்றபோது, 

சேலத்தில்  நான்கு ரோடு எனப்படும் நான்கு சாலைகள் சந்திக்கும் 

இடம் வந்ததும், அந்த நபர் தன்னை அழைத்துப் போக வந்த 

காவலர்களிடம்  ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். 

வியாழன், 18 செப்டம்பர், 2014

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 12




ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்கள். அதோடு ஏமாற்றுவோர்களும் திருடுபவர்களும் சும்மா இருக்கமாட்டார்கள் 

என்றும் சொல்லலாம். ஒரு மாவட்ட ஆட்சியாளரையே ஏமாற்றிவிட்டதால் 

நமது கதாநாயகனுக்கு துணிவு வந்து மேலும் மாவட்டத்தில் உள்ள மற்ற 

முதன்மை அதிகாரிகளிடம் தனது வேலையைக் காட்டத் துணிந்துவிட்டார்.

திங்கள், 15 செப்டம்பர், 2014

பல்திறப் புலமை விருதும் நானும்!




இன்று தேவகோட்டை திரு KILLERGEE அவர்கள் தனது பூவை பறிக்க கோடரி எதற்கு? என்ற வலைப்பதிவில்  என்னையும் சேர்த்து ஐந்து வலைப்பதிவர்களுக்கு  பல்திறப் புலமை விருது (The Versatile BloggerAward ) கொடுத்து கௌரவப்படுத்தியிருக்கிறார். அவருக்கு எனது மனமார்ந்த 
நன்றி!