ஞாயிறு, 21 நவம்பர், 2010

எனது ஓவியங்கள் 8

பழைய பதிவுகளில் சொல்லியதுபோல்

அஞ்சல் மூலம் ஓவியம் கற்றபோது

அவர்கள் அனுப்பிய படங்களை

பார்த்து போட்ட படங்களையும்,

மற்ற இதழ்களில் வந்த படங்களை

பார்த்து போட்ட படங்களையும்

கீழே தந்திருக்கிறேன்.


கீழே உள்ள படம் , 'ஆனந்த விகடன்'

அட்டைபடத்தைப்பார்த்து, 18 -10-1976 அன்று

வரைந்தது.ஆனால் இந்த படம் எனக்கு

முழு நிறைவை தரவில்லை.காரணம்

அழிப்பான் (Eraser) உபயோகப்படுத்தாமல்

நேரடியாக Ball Point பேனாவால்,

வரைந்ததால் சிறு தவறுகளை

திருத்த இயலவில்லை.




கீழே உள்ள படம் , ஒரு பத்திரிக்கையில்

வந்த புகைப்படத்தைப்பார்த்து

24 -10-1976 அன்று வரைந்தது.

அப்போதுதான் தெரிந்தது,

புகைப்படத்தைப்பார்த்து வரைவது

அவ்வளவு சுலபமல்ல என்று.





கீழே உள்ள படங்கள் அஞ்சல் வழி

பாடங்களைப்பார்த்து 24 -10-1976

அன்று வரைந்தது.








வேறு சில படங்கள் அடுத்த பதிவுகளில்.

புதன், 17 நவம்பர், 2010

எனது ஓவியங்கள் 7

மாயா சித்ராலயாவில் அஞ்சல் மூலம் ஓவியம்

கற்றபோது அவர்கள் அனுப்பிய படங்களை

பார்த்து போட்ட படங்களையும், மற்ற

இதழ்களில் வந்த படங்களை பார்த்து

போட்ட படங்களையும் கீழே தந்திருக்கிறேன்.



கீழே உள்ள படம், எனக்கு வந்த வாழ்த்து

அட்டையைப்பார்த்து 28 -01-1976 அன்று வரைந்தது.





கீழே உள்ள படங்கள் அதே நாளில் அஞ்சல் வழி

பாடங்களைப்பார்த்து வரைந்தது.









கீழே உள்ள படம்,'கல்கி'யில் வந்த

அட்டைபடத்தைப்பார்த்து

11 -10-1976 அன்று வரைந்தது.







வேறு சில படங்கள் அடுத்த பதிவுகளில்.

ஞாயிறு, 14 நவம்பர், 2010

எனது ஓவியங்கள் 6

1976-1980 களில் மணிப்பாலில் பணி புரிந்தபோது ,

உடுப்பில் தங்கியிருந்தேன்.

அங்கு உடுப்பி பாரத ஸ்டேட் வங்கியில்

மேலாளராக இருந்த திரு C.S.இராதாகிருஷ்ணன்

அவர்களது மகன் திரு ஸ்ரீதர் எனது

ஓவியங்களைப்பார்த்துவிட்டு'நீங்கள் ஏன் ஓவியர்

திரு மாயா நடத்தும்,மாயா சித்ராலயாவில்

சேர்ந்து முறைப்படி அஞ்சல் மூலம் ஓவியம்

கற்கக்கூடாது?' என சொன்னார்.


அவரும் அதில் சேர்ந்து ஓவியம் கற்று வருவதாக

சொன்னதும்,நானும் உடனே சேர்ந்துவிட்டேன்.

மாதம் ரூபாய் 12 தான் கட்டணம்.

படிப்பு காலம் இரண்டு ஆண்டுகள்.


முதலில் பென்சில் உபயோகித்து வட்டங்கள்,

கோடுகள், வளைவுகள் போடவேண்டும். பின்பு

அவர்கள் அனுப்பும் படங்களைப்பார்த்து

போடவேண்டும்.


படங்களை அஞ்சலில் அனுப்பினால்

ஓவியர் திரு மாயா அவர்களே அதை திருத்தி

அவரது குறிப்புகளோடு அனுப்புவார். நம்மையும்

காணும் சில பொருட்களை பார்த்து படம்

போட்டு பழகச்சொல்லுவார்.


பென்சிலால் போட்டு பழகியபின், இந்தியன் இங்க்

உபயோகித்து படம் போடவேண்டும். பின்பு பிரஷ்

மூலம் படம் போட பழக்குவார்கள். கடைசியில்

வண்ணபடங்கள் போடுவதையும் சொல்லித்தருவார்கள்.

இடையிடையே தேர்வுகளும் உண்டு.


பணிச்சுமை காரணமாக என்னால்

பதினெட்டு மாதங்களுக்கு பிறகு அஞ்சல்

படிப்பை தொடர இயலவில்லை.

ஆனாலும் முறைப்படி ஓவியம் வரைவது

எப்படி என்பதை கற்றுக்கொண்டது நிஜம்.


திரு மாயா அவர்கள் மிகவும் பொறுமையோடு

எனது பா(ப)டங்களை திருத்தி என்னை

வழி நடத்தியதை இந்த நேரத்தில்

சொல்லியே ஆகவேண்டும். ஒருவேளை

முழுமையாக அவரிடம் பயின்றிருந்தால்

நல்ல ஓவியனாகியிருப்போனோ என்னவோ!!


மாயா சித்ராலாயாவில் 1976-1977 களில்,

ஓவியம் கற்றபோது போட்ட

சில படங்களை அடுத்த பதிவுகளில்,

வெளியிட இருக்கிறேன்.

புதன், 3 நவம்பர், 2010

எனது ஓவியங்கள் 5

கீழே உள்ள படங்கள் பொள்ளாச்சியில் பணி

புரிந்தபோது,குமுதத்தில் வந்த கார்ட்டூன்களைப்பார்த்து,

27 -03-1971 அன்று Ball Point பேனாவால் இரவு 9 .15 மணிக்கு

வரையப்பட்டது









குமுதத்தில் வந்த அப்புசாமியும் சீதாப்பாட்டியும்

என்ற கதைக்கு,ஓவியர் திரு ஜெயராஜ் அவர்களால்

வரையப்பட்ட படத்தைப்பார்த்து 21- 06 -1971 ல்

இரவு 9 .10 க்கு வரைந்த படம் கீழே.






கீழே உள்ள படம் குமுதத்தில் வந்த திரு கருணாநிதி

அவர்களுடைய படத்தைப்பார்த்து,20-07-1972 ல்

இரவு 10.25 க்கு வரையப்பட்டது.






1973 மார்ச் மாதம் பட்டதாரி ஆசிரியர்கள் வேலை

நிறுத்தம் செய்தபோது,அதை எவ்வாறு தமிழக அரசு

கையாண்டது என்பதை குறிக்கும் விதமாக குமுதம்

28- 03 -1973 தேதியிட்ட இதழில் வெளியிட்ட

கார்ட்டூனைப்பார்த்து,25- 03 -1973 ந்தேதி

இரவு 10 .05 க்கு வரைந்த படம் கீழே.







இவைகள் யாவும் Free Hand ல் அழிப்பான் (Eraser)

உபயோகப்படுத்தாமல் வரைந்ததுதான் .





வேறு சில படங்கள் அடுத்த பதிவுகளில்.

வெள்ளி, 29 அக்டோபர், 2010

எனது ஓவியங்கள் 4

எனக்கு கார்ட்டூன் படங்கள் மிகவும் பிடிக்கும். அதனால் தான் கார்ட்டூன்படங்களைப்பார்த்ததும் உடனே அவைகளைப்பார்த்து வரைந்து இருக்கிறேன்.

என்னைப்பொறுத்தவரை கார்ட்டூன் படங்கள் வரைவது
கடினம் என எண்ணுகிறேன்.

கீழே உள்ள கார்ட்டூன் பொள்ளாச்சியில் பணி
புரிந்தபோது,குமுதத்தில் வந்ததைப்பார்த்து,
14-11-1970 அன்று வரைந்தது.

இந்த கார்ட்டூனை Ball Point பேனாவால் இரவு 9 .40 மணிக்கு
வரைந்தேன்




கீழே உள்ள கார்ட்டூனையும் குமுதம் இதழைப்பார்த்து

அதே நாள் இரவு 9 .45 மணிக்கு Ball Point பேனாவால்,

வரைந்தேன்.



கீழே உள்ள கார்ட்டூன் படங்களை, 29 -11 -1969 அன்று,

குமுதம் இதழைப்பார்த்து Ball Point பேனாவால்,

இரவு 8 .10 க்கும், 8 .30 க்கும் வரைந்தேன்.



திரைப்பட இயக்குனர் திரு ஸ்ரீதர் அவர்களின்
சித்ராலாயாவின் 'அவளுக்கென்று ஓர் மனம்' என்ற
படத்தின் விளம்பரத்தைப்பார்த்து கீழே உள்ள
படத்தை வரைந்தேன்.
வரைந்த நாள் 13 - 02 -1971.நேரம் மாலை மணி 6 .50




இந்த படங்கள் அனைத்தும் அழிப்பான் (Eraser) உபயோகப்படுத்தாமல் Free Hand ல் வரைந்ததுதான் .


வேறு சில படங்கள் அடுத்த பதிவுகளில்.

ஞாயிறு, 24 அக்டோபர், 2010

எனது ஓவியங்கள் 3

புது தில்லியில் பணி புரிந்தபோது , 'பால்கி' என்ற இந்தி
திரைப்பட விளம்பரத்தைப்பார்த்து,27-08-1968 அன்று
வரைந்தது கீழே உள்ள படம்.
(இந்த திரைப்படத்தில் வஹிதா ரஹ்மானும்,
ராஜேந்திர குமாரும் நடித்தாக நினைவு.)
இந்த படத்தை Ball Point பேனாவால்
மாலை 5 மணிக்கு வரைந்தேன்




கீழே உள்ள படங்கள் 02-10-1968 தேதியிட்ட ஆந்திர பிரபா இதழில் வந்த படத்தைப்பார்த்து,01 -10-1968 அன்று, Ball Point பேனாவால், வரைந்தது.
நேரம் இரவு பத்து மணி.








கீழே உள்ள படம் திரு கருணாநிதி அவர்கள்,
அண்ணா மறைவுக்குப்பின் முதல்வர் ஆனபிறகு
அவரைப்பற்றி Film Fare இதழில் வந்த
கட்டுரையின் கூட வந்த போட்டோவைப்பார்த்து ,
15 -o4 -1969 அன்று, பெங்களூருவில் பணி புரிந்தபோது,
Ball Point பேனாவால், வரைந்தது. நேரம் இரவு 10.30






இந்த படங்களும், அழிப்பான் (Eraser) உபயோகப்படுத்தாமல் Free Hand ல் வரைந்ததுதான் .

வேறு சில படங்கள் அடுத்த பதிவுகளில்.

வியாழன், 21 அக்டோபர், 2010

எனது ஓவியங்கள் 2

கீழே உள்ள படம் 1968 ல் புது தில்லியில், தேசிய விதைக்
கழகத்தில் பணி புரிந்தபோது , 27-06-1968 தேதியிட்ட குமுதம்
இதழில் வந்த படத்தைப்பார்த்து, 23 -06-1968 ல் வரைந்தது.





கீழே உள்ள படம் 04-07-1968 தேதியிட்ட குமுதம் இதழில்
வந்தபடத்தைப்பார்த்து, 30 -06-1968 ல் வரைந்தது.
(அப்போதெல்லாம் குமுதம் வெளியிடும் தேதிக்கு முன்பே கடைக்கு வந்துவிடும்)





கீழே உள்ள படம் 21-07-1968 அன்று வெளிவந்த ஆனந்த
விகடனின் அட்டைப்படத்தை பார்த்து 28 -08 -1968 ல் வரைந்தது.






இந்த படங்களும், அழிப்பான் (Eraser) உபயோகப்படுத்தாமல் Free Hand ல் வரைந்ததுதான் .


வேறு சில படங்கள் அடுத்த பதிவுகளில்.