சனி, 7 செப்டம்பர், 2019

பணி ஓய்வு பெற்றோருக்கும், ஓய்வு பெற இருப்போருக்கும் சில ஆலோசனைகள். 3


நமது வாழ்க்கை முறையில், பணியில் இருக்கும்போது இருப்பதற்கும் , பணி நிறைவு பெற்று ஓய்வெடுக்கும்போது இருப்பதற்கும் ஏதேனும் வேறுபாடு உண்டா என்றால் பதில் ஆம் என்றும் இல்லை என்றும் சொல்லலாம்.

ஞாயிறு, 1 செப்டம்பர், 2019

பணி ஓய்வு பெற்றோருக்கும், ஓய்வு பெற இருப்போருக்கும் சில ஆலோசனைகள். 2



ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும்.


வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் – இந்த
மண்ணில் நமக்கே இடமேது

என்கிறார் கவியரசர் கண்ணதாசன் அவர்கள்.

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2019

பணி ஓய்வு பெற்றோருக்கும், ஓய்வு பெற இருப்போருக்கும் சில ஆலோசனைகள். 1




பணியில் இருப்போர் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்தவுடன் ஓய்வு பெறுவதை பணி மூப்பு அடைதல் என்கிறோம். நடுவண் மற்றும் மாநில அரசு பணிகளில் இருப்போரின்  ஓய்வு பெரும் வயது முதலில் 55 ஆக இருந்து, பின்னர் 58 ஆகி தற்போது 60 ஆகிவிட்டது.

திங்கள், 19 ஆகஸ்ட், 2019

தொடரும் சந்திப்பு 11



பொள்ளாச்சி செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்ததும், எனது கைத்தொலைபேசி ஒலித்தது. யாரென்று பார்த்தால்  நண்பர் மீனாட்சி சுந்தரம். அவருடன் பேசியபோது  நான் எங்கிருக்கிறேன் என்று விசாரித்தார், பொள்ளாச்சி செல்லும் பேருந்தில் அமர்ந்துவிட்டதாக சொன்னவுடன், தான் பொள்ளாச்சி வந்துவிட்டதாகவும் அங்கு ‘ரத்னா ஸ்குயர்’ (Rathna Square) என்ற விடுதியில் நண்பர் செல்லப்பாவுடன் இருப்பதாகவும் சொன்னார். 

திங்கள், 29 ஜூலை, 2019

தொடரும் சந்திப்பு 10





மறு நாள் (31-08-18)  காலை வழக்கம் போல் 5.30 மணிக்கு எழுந்து குளித்துவிட்டு பொள்ளாச்சி புறப்பட ஆயத்தமானேன். 6 மணிக்கு நண்பர் திரு இந்திரஜித் நான் எழுந்துவிட்டதை அறிந்து தேநீர் அருந்த கூப்பிட்டார். கீழே சென்று தேநீர் அருந்தியதும், சார். வீட்டின் உள்ளேயும் வெளியேயும் பார்த்துவிட்டீர்கள். மேல் தளத்தை (Terrace) பார்க்கவில்லையே. வாருங்கள் பார்க்கலாம் என்று அழைத்து சென்றார்.

திங்கள், 22 ஜூலை, 2019

மொழிபெயர்ப்புக் க(கொ)லை! 5


எனக்கும் மேடைப்பேச்சை மொழிபெயர்க்கும் அனுபவம் ஏற்பட்டது என்று சொல்லியிருந்தேன். 1988 ஆம் ஆண்டு நான் சேலத்தில் பணியாற்றிக்கொண்டு இருந்தபோது அந்த மாவட்டதில் இருக்கும் ஒரு சிற்றூரில் கிளை திறக்க எங்களது வங்கிக்கு ரிசர்வ் வங்கியின் அனுமதி கிடைத்தது.

வியாழன், 20 ஜூன், 2019

தொடரும் சந்திப்பு 9


சரவணம்பட்டியிலிருந்து பட்டீஸ்வரர் கோவில் இருந்த போரூர் 18 கி.மீ தொலைவுதான் என்றாலும் மாலை வேளையில் இருந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக  மாற்றுப்பாதையில்  அழைத்து சென்றார் நண்பர் திரு இந்திரஜித்.