புதன், 28 ஜனவரி, 2015

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 22



இத்தாலியை சேர்ந்த Charles Ponzi என்பவர் 1920 களில், வெளி நாட்டில் International Reply Coupon களை வாங்கி அமெரிக்காவில் தபால் தலைகளாக மாற்றுவதன் மூலம், விலை வேற்றுமை வாணிபம் (Arbitrage) காரணமாக அதிக இலாபம் கிடைக்கும் என்பதால் அந்த திட்டத்தில் முதலீடு செய்வோருக்கு 45 நாட்களில் 50 விழுக்காடு இலாபமும் 100 நாட்களில் 100 விழுக்காடு இலாபமும் தருவதாக உறுதி அளித்து மக்களிடம் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி வைப்புத் தொகைகளை பெற்றார் என்றும் என்றும் ஆனால் அவர் திட்டத்தின்படி பணத்தை திருப்பித்தரவில்லை என்றும் சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.

வியாழன், 15 ஜனவரி, 2015

பொங்கல் வாழ்த்து!











பொங்கல் திருநாளாம் புத்தாண்டு பொன்னாளில்
எங்கும் நிறைந்த இறைவன் அருளால்
அல்லவை நீங்கிட நல்லவை சேர்ந்திட
அனைவர் மனதிலும் அன்பு பெருகிட
அடியேனின் அன்பான வாழ்த்து

பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

சனி, 10 ஜனவரி, 2015

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 21

மக்கள் தங்களது பணத்தை கட்டி ஏமாந்த சில திட்டங்கள்... ஏன் பொன்ஃஜி திட்டம் என அழைக்கப்படுகின்றன என்பதை தெரிந்து கொள்வதற்கு முன் Ponzi Scheme என்றால் என்ன என்பதை முதலில் பார்ப்போம்.

திங்கள், 5 ஜனவரி, 2015

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 20



ஏமாற்றுபவர்களில் பல வகையினர் உண்டு  என்பதை 
முந்தைய பதிவுகளில் தெரிவித்திருந்தேன். ஒரு சிலர் தனியே 
வந்து நேருக்கு நேர் (One to one) சாதுர்யமாகப் பேசி, பணம் பறிப்பவர்கள்.அப்படி பேசுகிறவர்களின் பேச்சில் மயங்கியோ 
அல்லது அவர்கள் நடிப்பை நிஜம் என்று நம்பி இரக்கப்பட்டோ 
நம்மில் சிலர் பணத்தை இழப்பதுண்டு.

செவ்வாய், 23 டிசம்பர், 2014

வங்கியாளர்களைப் பற்றிய நகைச்சுவை 8



நகைச்சுவையை விரும்பாதார் யார் உளர்? ஆனால் அது பிறர்  
மனதை புண்படுத்தாமல்  இருக்கவேண்டும்.மேலும் 
படிப்போருக்கும், கேட்பொருக்கும் அது  சிரிப்பை அல்லது 
புன் சிரிப்பை உண்டாக்குமானால் உண்மையில் அது 
நகைச்சுவைதான். 

புதன், 17 டிசம்பர், 2014

உலகை வலம் வரலாம் ஒரே நாளில் !



2025  ஆம் ஆண்டு. காலை 11.30 மணி இருக்கும். நியூயார்க் 
நகரிலிருந்து அரவிந்த் சென்னையில் இருக்கும் அவனது 
அம்மாவை தொலைபேசியில் அழைக்கிறான்.அம்மா.
ஒரு மகிழ்ச்சியான செய்தி. அலுவலக வேலையாக இன்று 
சென்னை வருகிறேன். என்றதும் அவனது அம்மா 
'என்னப்பா. நேற்று பேசியபோது கூட இந்தியா வருவதாக சொல்லவில்லையே. எப்போது கிளம்புகிறாய்? எங்கிருந்து 
பேசுகிறாய். இப்போது அங்கு மணி என்ன?’ என்றதும், 
அரவிந்த், அம்மா. அவசரவேலையாக என்னை எனது 
நிறுவனம் இன்றைக்கே கிளம்பவேண்டும் என்று சொல்லி 
சென்னைக்கு அனுப்புகிறார்கள். நான் இப்போது 
விமான நிலையத்திலிருந்து தான் பேசுகிறேன். 
இப்போது இங்கு இரவு மணி 1.00. சரி. விமானத்தில் 
ஏற அழைக்கிறார்கள்.மற்றவற்றை நேரில் வந்து 
சொல்கிறேன். என்று சொல்லிகைப்பேசி இணைப்பை 
துண்டிக்கிறான்.

வியாழன், 4 டிசம்பர், 2014

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 19


பாராளுமன்ற சாலையில் இருந்த பாரத ஸ்டேட் வங்கி கிளையில் உள்ள 

மாற்று சாவியை  கொண்டு வர நண்பர் திரு வாசுதேவன் புறப்பட்டபோது 

நானும் வருகிறேன் என்று சொல்லி அவரோடு எனது ஜாவா மோட்டார் 

சைக்கிளில் அந்த கிளைக்கு புறப்பட்டேன்.