வெள்ளி, 22 ஏப்ரல், 2016

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.25


தி.மு. க. ஆட்சிக்கு வந்த 1967 ஆம் ஆண்டு இந்தி திணிப்பு போராட்டக்குழுவில் இருந்த தீவிரவாத பிரிவைச் சேர்ந்தோர் போராட்டத்தை மீண்டும் துவக்கினார்கள் என்றும், 1967 ஆம் ஆண்டு டிசம்பர் 19 நாளன்று துவங்கிய அந்த போராட்டம் டிசம்பர் 21 ஆம் நாளன்று வன்முறை போராட்டமாக மாறியது என்றும்  முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.

புதன், 13 ஏப்ரல், 2016

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.24


1967 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்களில் மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில் வெற்றிபெற்றது போலவே பாராளுமன்றத் தேர்தலிலும் தி.மு.க அணிக்கு வெற்றி முகம் தான். திமுக 25 தொகுதிகளிலும், சுதந்திரா கட்சி 6 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 4 இடங்களிலும்,முஸ்லிம் லீக் 1 இடத்திலும் வெற்றி பெற்று 39 இடங்களில் 36 இடங்களை கைப்பற்றின. ஆண்ட காங்கிரசோ வெறும் 3 இடங்களோடு திருப்தி பட்டுக்கொள்ளவேண்டியதாயிற்று.


புதன், 6 ஏப்ரல், 2016

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.23


1967 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்களில் மாநில சட்டசபைக்கும் பாராளுமன்றத்திற்கும் தேர்தல் நடந்தபோது, கர்நாடக மாநிலம் (அப்போது மைசூர் மாநிலம்) தார்வார் மாவட்டத்தில் கதக் (Gadag) என்ற ஊரில் தேசிய விதைக் கழகத்தில் விதைப் பெருக்க அலுவலராக (Seed Production Assistant) ஆக நான் பணிபுரிந்துகொண்டிருந்தேன். (இப்போது கதக் தனி மாவட்டமாக ஆகிவிட்டது.)

சனி, 26 மார்ச், 2016

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.22


1965 ஆம் ஆண்டு நடந்த இந்தி திணிப்பு போராட்டம் ஒருவழியாக தற்காலிகமாக முடிவுக்கு வந்ததால், தமிழகத்தில் அமைதி திரும்பியது போல் இருந்தாலும் அது புயலுக்குப்பின் அமைதி போன்றது தான் என்பதை அப்போதைய அரசு உணரவில்லை.

வெள்ளி, 18 மார்ச், 2016

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.21


1966 ஆம் ஆண்டு சனவரி திங்கள் 27 ஆம் நாள் மாலை, அதற்கு முந்தைய ஆண்டு அதே நாளன்று காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிர் துறந்த மாணவர் திரு இராஜேந்திரனுக்கு முதலாம் ஆண்டு நினைவாஞ்சலி செலுத்த அண்ணாமலைபல்கலைக்கழகத்தில் உள்ள திறந்த வெளி அரங்கில் (Open Air Theatre) மாணவர்கள் அனைவரும் கூடினோம்.

வெள்ளி, 11 மார்ச், 2016

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.20


1965 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 25 ஆம் நாள், பாராளுமன்ற அவைத் தலைவரால், பாராளுமன்றத்தில் கலந்தாய்வு (Discussion) க்காக அனுமதிக்கப்பட்ட பாராளுமன்ற துணைக்குழு தயாரித்த அலுவல் மொழி சட்டத்தில் கொண்டுவரவேண்டிய மாற்றம் பற்றிய சட்ட முன்வரைவு (Bill), பஞ்சாப் பிரிவினைப் போராட்டம் மற்றும் காஷ்மீர் பிரச்சினைகளை காரணம் காட்டி சட்ட திருத்தம் கொண்டுவர அது சரியான நேரம் இல்லையென கூறி அந்த சட்ட முன்வரைவு திரும்பப்பெறப்பட்டது என்று முந்தைய பதிவில் சொல்லியிருந்தேன்.

சனி, 5 மார்ச், 2016

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.19

மாணவர்கள் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை பிப்ரவரி 12 ஆம் நாள் கைவிட்ட காரணத்தால் தமிழகத்தில் மூடப்பட்டிருந்த கல்லூரிகளும் பள்ளிகளும் மீண்டும் திறக்கப்பட்டன. எங்களது அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் 50 நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்டது. நாங்களும் திரும்பவும் வகுப்புக்களுக்கு செல்லத் தொடங்கினோம்.