வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

தொடரும் சந்திப்பு 1



அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண் அறிவியல் பட்டப் 
படிப்பை 1962-1966 இல் படித்த வகுப்புத் தோழர்களாகிய நாங்கள், பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் 1967 ஆம் ஆண்டு சந்தித்த பிறகு, முதன் முறையாக புதுவையில் 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 22, மற்றும் 23 நாட்களிலும், இரண்டாவது முறையாக கோடைக்கானலில் 2008 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 9,10, மற்றும் 11 ஆம் நாட்களிலும் சந்தித்தோம்.

செவ்வாய், 15 ஜனவரி, 2019

பொங்கல் வாழ்த்து!





பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துகள்!



பொங்கல் வாழ்த்து


உண்ண உணவும் உடுக்க உடையும்
இருக்க இடமும் இயற்கையின் சீற்றத்தால்
இல்லாமல்  போனாலும் நல்லதே நாளை
நடக்குமென நம்பிக்கை கொண்டதனை எதிர்நோக்கும் 
தஞ்சைப் படுகை தரணிவாழ் மக்களின்
துன்பமும் துன்மையும் விட்டு விலகவும்
நன்மைகள் யாவும் இனிதே நடக்கவும்
நம்மால்  இயன்ற உதவியை செய்து
உழவர்தம் வாழ்க்கை சிறப்பாய் உயர்ந்திட
எங்கும் நிறைந்த இறைவனைத் வேண்டி     
தமிழர் திருநாளாம் புத்தாண்டு நன்னாளில்
வாழ்கவென வாழ்த்துவேன்  நான்


அன்புடன்

வே.நடனசபாபதி




எங்கள் வீட்டின் முன் போடப்பட்ட கோலங்கள் கீழே.



பி.கு ஓராண்டுக்குப் பிறகு வலையில் பதிவிட வந்திருக்கிறேன். சில முக்கிய பணி காரணமாக கடந்த 12 திங்களாக பதிவிட இயலவில்லை. இனி உங்கள் அனைவரின் ஆதரவுடன் பதிவிட இருக்கிறேன்


ஞாயிறு, 14 ஜனவரி, 2018

பொங்கல் வாழ்த்து

பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துகள்!



பொங்கல் வாழ்த்து


வானமே பொய்த்தாலும் பூமியே காய்ந்தாலும்

வையத்தில் வாழ்வோர் வயிறார உண்ண

வேளாண்மை செய்து விளைச்சலைத்  தந்த

உழவர் குலத்தை உளமாற  வாழ்த்தி

இனிவரும் நாட்கள் இனிதாய் இருக்க

தனக்குவமை இல்லா இறைவனை வேண்டி

தரணியில் வாழும் தமிழர்கள் யாவரையும்

தைத்திங்கள் நன்னாளாம் பொங்கல் பெருநாளில்

வாழ்கவென வாழ்த்துவேன்  நான்



அன்புடன்



வே.நடனசபாபதி




எங்கள் வீட்டின் முன் போடப்பட்ட கோலங்கள் கீழே. 















சனி, 13 ஜனவரி, 2018

திரும்பவும் வந்துவிட்டேன்.


வலையுலக நண்பர்களுக்கு புத்தாண்டு மற்றும் போகி நாள் நல் வாழ்த்துக்கள்!


கடந்த ஆண்டு செப்டம்பர் 12 ஆம் நாளுக்குப் பிறகு நான் வலையுலகத்திற்கே வர இயலவில்லை. அதற்கு பல காரணங்கள். அதில் முதன்மையானது எனது மடிக்கணினியில் ஏற்பட்ட சிக்கல். நன்றாக செயலாற்றிக்கொண்டு இருந்த மடிக்கணினி திடீரென மக்கர் செய்து  செயலிழந்துவிட்டது. பிறகுதான் தெரிந்துகொண்டேன். அதற்கு வயதாகிவிட்டது என்று! 2009 ஆம் ஆண்டு டிசம்பர் திங்களில் வாங்கிய அது 8 ஆண்டுகள் உழைத்து ஓய்ந்துவிட்டது.

செவ்வாய், 12 செப்டம்பர், 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 38

மறுநாள் காலை நாங்கள் பயணித்த ‘மன்னை’ விரைவு இரயில் 13-09-2016 அன்று அதிகாலை 5.10 க்கு மாம்பலம் இரயில் நிலையம் அடைந்ததும், நண்பர் சேதுராமன் எங்களிடம் விடைபெற்று இறங்கிக்கொண்டார். நாங்கள் எழும்பூர் இரயில் நிலையம் அடைந்தபோது காலை மணி 5.50.

புதன், 6 செப்டம்பர், 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 37

முத்துப்பேட்டை தர்காவிலிருந்து நேரே முத்துப்பேட்டை வடக்குக்காடு என்ற இடத்திலிருந்த சின்னப் பண்ணை திரு S.A.D.தட்சிணாமூர்த்தி அவர்களது வீட்டிற்கு சென்றோம். அவர் வேறு யாருமல்லர். நண்பர் நாகராஜனின் சம்பந்தி தான் அவர்.

சனி, 2 செப்டம்பர், 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 36

அனைவருக்கும் தியாகத் திருநாள் நல் வாழ்த்துகள்!


அந்த தென்னந்தோப்பு வீட்டிலிருந்து புறப்பட்டு அடுத்து நாங்கள் சென்ற இடம் முத்துபேட்டைக்கு வரும் அனைத்து மக்களும் செல்லக்கூடிய இடமான, ஹழரத் ஷைக் தாவூத் காமில் ஒலியுல்லாஹ் எனும் பெருந்தகையின் நினைவிடமான முத்துப்பேட்டை தர்கா ஆகும்.இதை ஜம்பவனோடை தர்கா எனவும் அழைக்கிறார்கள்.