செவ்வாய், 23 டிசம்பர், 2014

வங்கியாளர்களைப் பற்றிய நகைச்சுவை 8



நகைச்சுவையை விரும்பாதார் யார் உளர்? ஆனால் அது பிறர்  
மனதை புண்படுத்தாமல்  இருக்கவேண்டும்.மேலும் 
படிப்போருக்கும், கேட்பொருக்கும் அது  சிரிப்பை அல்லது 
புன் சிரிப்பை உண்டாக்குமானால் உண்மையில் அது 
நகைச்சுவைதான். 

புதன், 17 டிசம்பர், 2014

உலகை வலம் வரலாம் ஒரே நாளில் !



2025  ஆம் ஆண்டு. காலை 11.30 மணி இருக்கும். நியூயார்க் 
நகரிலிருந்து அரவிந்த் சென்னையில் இருக்கும் அவனது 
அம்மாவை தொலைபேசியில் அழைக்கிறான்.அம்மா.
ஒரு மகிழ்ச்சியான செய்தி. அலுவலக வேலையாக இன்று 
சென்னை வருகிறேன். என்றதும் அவனது அம்மா 
'என்னப்பா. நேற்று பேசியபோது கூட இந்தியா வருவதாக சொல்லவில்லையே. எப்போது கிளம்புகிறாய்? எங்கிருந்து 
பேசுகிறாய். இப்போது அங்கு மணி என்ன?’ என்றதும், 
அரவிந்த், அம்மா. அவசரவேலையாக என்னை எனது 
நிறுவனம் இன்றைக்கே கிளம்பவேண்டும் என்று சொல்லி 
சென்னைக்கு அனுப்புகிறார்கள். நான் இப்போது 
விமான நிலையத்திலிருந்து தான் பேசுகிறேன். 
இப்போது இங்கு இரவு மணி 1.00. சரி. விமானத்தில் 
ஏற அழைக்கிறார்கள்.மற்றவற்றை நேரில் வந்து 
சொல்கிறேன். என்று சொல்லிகைப்பேசி இணைப்பை 
துண்டிக்கிறான்.

வியாழன், 4 டிசம்பர், 2014

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 19


பாராளுமன்ற சாலையில் இருந்த பாரத ஸ்டேட் வங்கி கிளையில் உள்ள 

மாற்று சாவியை  கொண்டு வர நண்பர் திரு வாசுதேவன் புறப்பட்டபோது 

நானும் வருகிறேன் என்று சொல்லி அவரோடு எனது ஜாவா மோட்டார் 

சைக்கிளில் அந்த கிளைக்கு புறப்பட்டேன்.

திங்கள், 24 நவம்பர், 2014

கனவில் வந்த காந்தி - தொடர் பதிவு



கனவு என்பது நம் ஆழ்மனதில் உள்ளவைகளின் வெளிப்பாடு 
நாம் உறங்கும்போது சிலசமயம் நம்மையறியாமல் நம்முடைய 
மனதில் ஏற்படும் உருவங்கள்,எண்ணங்கள், உணர்ச்சிகள்,மற்றும் புலனுணர்வுகளின் தொடர்ச்சிதான் கனவுகள் என்கிறார்கள் அறிவியலார்கள். ஆனாலும் இன்னும் கனவைப்பற்றிய 
ஆராய்ச்சிகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

வெள்ளி, 21 நவம்பர், 2014

Snap Deal ஆ Snap the Deal ஆ?



கடைகளுக்குப் போய் நமக்குத் தேவையானவைகளை வாங்கிய 
காலம் போய், இருந்த இடத்திலிருந்தே நமக்கு பிடித்தவைகளை இணையத்தின் மூலம் கடன் அட்டை (Credit Card) அல்லது 
இணைய வங்கி (Net Banking) மூலமோ பணத்தை செலுத்தி 
வீட்டிற்கே பொருட்களை பெறும் காலம் இது. சில வேளைகளில் 
முன் பணம் செலுத்தாமல் வீட்டிற்கு பொருட்களை 
தூதஞ்சல்(Courier) மூலம் பெறும்போது பணத்தை செலுத்தும்
வசதியையும்  சில மின் வணிகம் நடத்தும் 
நிறுவனங்கள் அனுமதிப்பதுண்டு. 

செவ்வாய், 11 நவம்பர், 2014

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 18



பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை காசாளரிடம் அப்போதைய பிரதமர் 
திருமதி இந்திரா காந்தி அவர்களின் குரலில் பேசி ரூபாய் 60 இலட்சம் 
பணத்தை பெற்று சென்ற நகர்வாலாவை (Rustom Sohrab Nagarwala)   
காவல் துறையினர் கைது செய்து விசாரித்தபோது அவர் குற்றத்தை 
ஒப்புக்கொண்டார்.

வெள்ளி, 31 அக்டோபர், 2014

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 17



1971 ஆம் ஆண்டு மே திங்கள் 21 ஆம் நாள் வெள்ளிக்கிழமை 
காலை கண் விழித்தபோது புது தில்லியில் உள்ளோரும் 
ஏன் இந்தியாவில் உள்ளோர் எவருமே அன்று நடக்க இருக்கும் 
ஒரு நிகழ்வு நாட்டையே உலுக்கப் போகிறது என 
அறிந்திருக்கவில்லை. அந்த நிகழ்வில் தானும் ஒரு பகுதியாக
இருக்கப் போகிறோம் என்று பாரத ஸ்டேட் வங்கியின்
தலைமை காசாளர் ஒருவரும் எண்ணியிருக்கமாட்டார்!