மாணவர்கள் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை பிப்ரவரி 12 ஆம் நாள் கைவிட்ட காரணத்தால் தமிழகத்தில் மூடப்பட்டிருந்த கல்லூரிகளும் பள்ளிகளும் மீண்டும் திறக்கப்பட்டன. எங்களது அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் 50 நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்டது. நாங்களும் திரும்பவும் வகுப்புக்களுக்கு செல்லத் தொடங்கினோம்.
சனி, 5 மார்ச், 2016
ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016
இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.18
மய்ய அரசின் இந்தி திணிப்பு பற்றி காங்கிரசிற்குள்ளும் தீவிர கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.1965 ஆம் ஆண்டு சனவரி 31 நாளன்று அப்போதைய மைசூர் மாநில முதல்வர் எஸ்.நிஜலிங்கப்பா, மய்ய அமைச்சர் நீலம் சஞ்சீவ ரெட்டி, காங்கிரசு கட்சித்தலைவர் காமராஜர், வங்காள காங்கிரசு தலைவர் அதுல்ய கோஷ் ஆகியோர் மைசூரில் ஒன்றுகூடி இது பற்றி விவாதித்தனர்.
லேபிள்கள்:
நிகழ்வுகள்
செவ்வாய், 23 பிப்ரவரி, 2016
இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.17
இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை நசுக்க இரும்புக் கரம் கொண்டு அடக்குவதாக நினைத்து அப்போதைய முதல்வர் திரு பக்தவத்சலம் அவர்கள் காவல்துறையை கட்டவிழ்த்து விட்டதால் காவல்துறை மாணவர் ஊர்வலங்கள் மீது தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்த அது நிலைமையை மேலும் மோசமாக்கியது.
லேபிள்கள்:
நிகழ்வுகள்
வியாழன், 4 பிப்ரவரி, 2016
இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.16
திடீரென பல்கலைக்கழக விடுதியை காலி செய்ய சொன்னதும் நானும் அறையை காலி செய்துவிட்டு பேருந்து நிலையம் சென்று விருத்தாசலம் செல்லும் பேருந்தில் ஏறி ஊருக்கு புறப்பட்டேன். எங்களது போராட்டம் காரணமாக பல்கலைக் கழகம் மூடப்பட்டுவிட்டது என்று ஊருக்கு போனவுடன் அப்பாவிடம் சொன்னால் என்ன சொல்வார்களோ என்ற பயம் அப்போது எனக்கில்லை.
லேபிள்கள்:
நிகழ்வுகள்
திங்கள், 25 ஜனவரி, 2016
தொடரும் பயணங்கள் – தொடர் பதிவு
எனது பள்ளிப் பருவத்திலும், கல்லூரி நாட்களிலும் பின்னர் மாநில அரசின் வேளாண்மைத்துறையிலும் மற்றும் மய்ய அரசின் பொதுத்துறை நிறுவனமான தேசிய விதைக் கழகத்திலும், நாட்டுடைமையாக்கப்பட்ட சிண்டிகேட் வங்கியிலும் பணி புரிந்தபோது மேற்கொண்ட பயணங்கள் அநேகம்.
லேபிள்கள்:
தொடர் பதிவுகள்
வெள்ளி, 15 ஜனவரி, 2016
பொங்கல் வாழ்த்து!
பொங்கல் திருநாளாம் புத்தாண்டு பொன்னாளில்
பாசமும் நேசமும் பால்போல பொங்கவும்
இன்பமும் ஈகையும் இவ்வுலகில் தங்கவும்
துன்மையும் துன்பமும் தொலைந்து போகவும்
நன்மைகள் யாவையும் நாட்டவர் பெற்று
நலமுடன் வாழ இறைவனை வேண்டி
அடி யவன் வாழ்த்தும் வழுத்து,
பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் உளங்கனிந்த பொங்கல் மற்றும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
(மேலே உள்ள கோலங்கள் என் மகள் எங்கள் வீட்டின் முன் இன்று போட்டவை.)
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் வாழ்த்தை நானே எழுதுவதுபோல் இந்த ஆண்டும் எழுதியிருக்கிறேன். சென்ற ஆண்டு பதிவர் திரு ஜோசப் விஜூ அவர்களின் ‘ஊமைக்கனவுகள்’ என்ற வலைப்பதில் வந்த ‘யாப்புச்சூக்குமம்’ என்ற தொடர் பதிவின் மூலம் வெண்பா எழுத கற்றுக்கொண்டு மூன்று சிறிய தவறுகளுடன் பொங்கல் வாழ்த்தை பஃறொடை வெண்பாவாக எழுதியிருந்தேன்.
இந்த ஆண்டும் பொங்கல் வாழ்த்தை வெண்பாவில் எழுத எண்ணி எழுதியிருக்கிறேன்! ஆனால் இதில் எதுகை மோனை சரியாக வரவில்லை என்பது எனக்குத் தெரியும். தவறு இருப்பின் திரு ஜோசப் விஜூ அவர்கள் சுட்டிக்காட்ட வேண்டுகிறேன்.
வாழ்த்துக்களுடன்
வே.நடனசபாபதி
லேபிள்கள்:
வாழ்த்து
வெள்ளி, 8 ஜனவரி, 2016
இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.15
மதுரையில் இந்தி திணிப்பை எதிர்த்து ஊர்வலம் நடத்திய மாணவர்கள் தாக்கப்பட்டதை எதிர்த்து அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்களாகிய நாங்கள் 27-01-1965 ஆம் ஆண்டு நடத்திய கண்டன ஊர்வலத்தில் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சக மாணவன் ஒருவனை பறிகொடுத்தோம் என்பதையும், அதற்கு நீதி கேட்டு எங்கள் பல் கலைக் கழகத்தின் Eastern Hostel இன் முன் வாயில் கதவருகே நாங்கள் அமர்ந்திருந்தபோது சிதம்பரம் நகரசபை தலைவர் வந்து பேசியும் எங்களை சமாதானப்படுத்தமுடியாமல் திரும்பிவிட்டார் என்று சொல்லியிருந்தேன்.
லேபிள்கள்:
நிகழ்வுகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)